திருப்பூர் அலகுமலையில் களைகட்டும் ஜல்லிகட்டு : அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

திருப்பூர் : திருப்பூரை அடுத்த அலகு மலையில் 2-வது ஆண்டாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில், சீறிப்பாய்ந்து வரும் காளைகளை, காளையர்கள் ஆக்ரோஷமாக அடக்கி வருகின்றனர்.


திருப்பூர் : திருப்பூரை அடுத்த அலகு மலையில் 2-வது ஆண்டாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில், சீறிப்பாய்ந்து வரும் காளைகளை, காளையர்கள் ஆக்ரோஷமாக அடக்கி வருகின்றனர்.



திருப்பூரை அடுத்த அலகுமலையில் இரண்டாவது முறையாக திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கம் சார்பில் அலகுமலை பகுதியில் இரண்டாம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதனை தமிழக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில், மத்திய விலங்குகள் நலவாரிய உறுப்பினர் விட்டல், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். 



முன்னதாக, மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். இப்போட்டியில் 500 காளைகளும், 550 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.போட்டி நடைபெறும் பகுதிகளில் வாகன வசதி, குடிநீர் வசதி, அரசு தெரிவித்த அனைத்து வழிகாட்டு முறைகள் பின்பற்றப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. 



வாடிவாசல் வழியாக ஆக்ரோஷமாக வந்த காளைகளை இளைஞர்கள் சீறீப்பாய்ந்து அடக்கி மகிழ்ந்தனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் முதற்கட்டமாக, 30-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. தமிழர்களின் இந்த வீரவிளையாட்டை 30,000-க்கும் மேற்பட்டோர் அமர்ந்து கண்டு களித்து வருகின்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...