திருப்பூர் : திருப்பூரில் ரியல் எஸ்டேட் இடைத்தரகரின் வீட்டின் பூட்டை உடைத்து 47 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் : திருப்பூரில் ரியல் எஸ்டேட் இடைத்தரகரின் வீட்டின் பூட்டை உடைத்து 47 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் - காங்கேயம் சாலை பொன்னம்மாள் லே-அவுட் பகுதியில் வசித்து வருபவர் நடராஜ். ரியல் எஸ்டேட் இடைத்தரகரான இவர், கடந்த புதன்கிழமையன்று மனைவி கண்ணம்மாள் மற்றும் மகள் அகல்யாவுடன் கும்பகோணத்திலுள்ள திருவிடைமருதூர் கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு சுவாமி தரிசனம் முடித்துவிட்டு, நேற்றிரவு தங்கள் வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.

அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த நடராஜின் குடும்பத்தினர், உள்ளே சென்று பார்த்த போது, வீட்டினுள் இருந்த பீரோக்கள், அலமாரிகள் உடைக்கப்பட்டு மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த 47.5 சவரன் நகை மற்றும் ரூ. 81,000 பணம் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, நடராஜ் அளித்த புகாரின் பேரில், திருப்புர் தெற்கு போலிசார் கைரேகை மற்றும் தடயங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், வீட்டின் கதவை உடைத்த கொள்ளையர்கள் வீட்டின் அலமாரியில் வைத்திருந்த பொம்மையின் கீழ் மறைத்து வைத்திருந்த சாவியையும் கண்டெடுத்து கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

திருப்பூர் - காங்கேயம் சாலை பொன்னம்மாள் லே-அவுட் பகுதியில் வசித்து வருபவர் நடராஜ். ரியல் எஸ்டேட் இடைத்தரகரான இவர், கடந்த புதன்கிழமையன்று மனைவி கண்ணம்மாள் மற்றும் மகள் அகல்யாவுடன் கும்பகோணத்திலுள்ள திருவிடைமருதூர் கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு சுவாமி தரிசனம் முடித்துவிட்டு, நேற்றிரவு தங்கள் வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.

அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த நடராஜின் குடும்பத்தினர், உள்ளே சென்று பார்த்த போது, வீட்டினுள் இருந்த பீரோக்கள், அலமாரிகள் உடைக்கப்பட்டு மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த 47.5 சவரன் நகை மற்றும் ரூ. 81,000 பணம் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, நடராஜ் அளித்த புகாரின் பேரில், திருப்புர் தெற்கு போலிசார் கைரேகை மற்றும் தடயங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், வீட்டின் கதவை உடைத்த கொள்ளையர்கள் வீட்டின் அலமாரியில் வைத்திருந்த பொம்மையின் கீழ் மறைத்து வைத்திருந்த சாவியையும் கண்டெடுத்து கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.