தொலைக்காட்சி கட்டண சேனல்களை வாடிக்கையாளர்களே தேர்வு செய்யும் டிராயின் புதிய நடைமுறை அமலுக்கு வந்தது.
தொலைக்காட்சி கட்டண சேனல்களை வாடிக்கையாளர்களே தேர்வு செய்யும் டிராயின் புதிய நடைமுறை அமலுக்கு வந்தது.
டிராய் எனப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், கடந்த ஜூலை 3 -ம் தேதி கேபிள் டிவி ஒழுங்குமுறை சட்டத்தை அறிவித்தது. இதன் படி, தொலைக்காட்சி பார்க்கும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் நெட்வொர்க் கெபாசிடி கட்டணமாக ரூ.130 மற்றும் 18% ஜிஎஸ்டி வரி ரூ.23 மற்றும் 40 பைசாவுடன் சேர்த்து மொத்தம் ரூ.153 மற்றும் 40 பைசா செலுத்த வேண்டும்.
இதோடு அல்லாது, கட்டணச் சேனல்களுக்கு தனியாக பணம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதனால் மக்கள் விருப்பமான சேனல்களை மட்டும் தேர்வு செய்து பார்க்கவும், அதற்கான கட்டணத்தை மட்டும் வசூல் செய்யவும் வழிவகை செய்யும் என டிராய் கூறியது. இந்த திட்டத்தை நிறைவேற்ற கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் மற்றும் டி.டி.எச் நிறுவனங்களுக்கு டிராய் ஜனவரி 31 -ம் தேதி வரை காலம் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நாம் விரும்பும் சேனல்களை, நாமே தேர்வு செய்து, அதற்கு மட்டும் கட்டணம் செலுத்தும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்தது. இனி ஒவ்வொரு வாடிக்கையாளரும் 100 இலவச சேனல்களை அடிப்படை கட்டணத்தை செலுத்திப் பார்க்கலாம். குறிப்பாக, இந்த சேனல்களின் பட்டியலில், தூர்தர்ஷனின் 25 சேனல்களும் அடங்கும்.
மேலும், 100 -க்கும் மேற்பட்ட இலவச சேனல்கள் வேண்டும் என விரும்புவர்கள், ஒவ்வொரு 25 இலவச சேனலுக்கும், கூடுதலாக ரூ.20 கட்டணம் செலுத்த வேண்டும். மேலும், கட்டண சேனல்கள் தேவைப்படுமாயின் அதற்கும் தனியாக கட்டணம் செலுத்த வேண்டும். ஒரு கட்டண சேனலை ஒரு மாதம் பெற்றுக்கொள்ள அதிகபட்சம் ரூ.19 மட்டுமே வாடிக்கையாளரிடம் பெற வேண்டும் என அரசு உச்சவரம்பு நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டிராய் எனப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், கடந்த ஜூலை 3 -ம் தேதி கேபிள் டிவி ஒழுங்குமுறை சட்டத்தை அறிவித்தது. இதன் படி, தொலைக்காட்சி பார்க்கும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் நெட்வொர்க் கெபாசிடி கட்டணமாக ரூ.130 மற்றும் 18% ஜிஎஸ்டி வரி ரூ.23 மற்றும் 40 பைசாவுடன் சேர்த்து மொத்தம் ரூ.153 மற்றும் 40 பைசா செலுத்த வேண்டும்.
இதோடு அல்லாது, கட்டணச் சேனல்களுக்கு தனியாக பணம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதனால் மக்கள் விருப்பமான சேனல்களை மட்டும் தேர்வு செய்து பார்க்கவும், அதற்கான கட்டணத்தை மட்டும் வசூல் செய்யவும் வழிவகை செய்யும் என டிராய் கூறியது. இந்த திட்டத்தை நிறைவேற்ற கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் மற்றும் டி.டி.எச் நிறுவனங்களுக்கு டிராய் ஜனவரி 31 -ம் தேதி வரை காலம் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நாம் விரும்பும் சேனல்களை, நாமே தேர்வு செய்து, அதற்கு மட்டும் கட்டணம் செலுத்தும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்தது. இனி ஒவ்வொரு வாடிக்கையாளரும் 100 இலவச சேனல்களை அடிப்படை கட்டணத்தை செலுத்திப் பார்க்கலாம். குறிப்பாக, இந்த சேனல்களின் பட்டியலில், தூர்தர்ஷனின் 25 சேனல்களும் அடங்கும்.
மேலும், 100 -க்கும் மேற்பட்ட இலவச சேனல்கள் வேண்டும் என விரும்புவர்கள், ஒவ்வொரு 25 இலவச சேனலுக்கும், கூடுதலாக ரூ.20 கட்டணம் செலுத்த வேண்டும். மேலும், கட்டண சேனல்கள் தேவைப்படுமாயின் அதற்கும் தனியாக கட்டணம் செலுத்த வேண்டும். ஒரு கட்டண சேனலை ஒரு மாதம் பெற்றுக்கொள்ள அதிகபட்சம் ரூ.19 மட்டுமே வாடிக்கையாளரிடம் பெற வேண்டும் என அரசு உச்சவரம்பு நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.