கோவை : 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு, தற்போது பிணையில் வெளிவந்த கோவை ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கோவை : 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு, தற்போது பிணையில் வெளிவந்த கோவை ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அரசு பள்ளிகளை மூடக் கூடாது, அரசாணை 56 ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில், கோவை மாவட்டத்தில் 50 -க்கும் மேற்பட்ட ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் முயற்சியால் அனைவருக்கும் பிணை வழங்கப்பட்டது. இதையடுத்து, கோவை சிறையில் இருந்து வெளிவந்த ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுக்கு நூற்றுக்கணக்கான அரசு மற்றும் ஆசிரியர்கள் வரவேற்பு அளித்தனர். அதற்கு முன்னதாக ஜமாப் மேளம் அடித்து, பட்டாசுகள் வெடித்தும் வரவேற்பளித்தனர்.
மேலும், அவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் குமார், ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஒருவரான உமா செல்வராஜ், அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் ஆறுச்சாமி, இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட தலைவர் தினேஷ் உள்ளிட்டோர் வாழ்த்தி உரையாற்றினர்.