கோவை : நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தந்தி தொலைக்காட்சி வெளியிட்ட கருத்து கணிப்பை கண்டித்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடத்திய புதிய தமிழகம் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
கோவை : நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தந்தி தொலைக்காட்சி வெளியிட்ட கருத்து கணிப்பை கண்டித்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடத்திய புதிய தமிழகம் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தந்தி தொலைக்காட்சி நிறுவனம் ஒரு கருத்து கணிப்பை வெளியிட்டது. அதில் ஒட்டபிடாரம் தொகுதியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிட்டால் தோல்வியடைவார் எனவும், திமுக வெற்றி பெறும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். இதற்கு புதிய தமிழகம் கட்சியினர் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அக்கட்சியின் மாவட்ட நாடாளுமன்ற பொறுப்பாளர் நக்கீரன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அப்போது உருவ பொம்மையை எரித்துக் கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை பந்தயசாலை காவல் துறையினர் கைது செய்தனர்.
