சென்னை : மரம் வளர்க்கும் ஒவ்வொரு மாணவருக்கும் பாடத்திற்கு இரு மதிப்பெண்கள் வீதம் 6 பாடத்திற்கு 12 என அடுத்த கல்வியாண்டு முதல் மதிப்பெண்கள் அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
சென்னை : மரம் வளர்க்கும் ஒவ்வொரு மாணவருக்கும் பாடத்திற்கு இரு மதிப்பெண்கள் வீதம் 6 பாடத்திற்கு 12 என அடுத்த கல்வியாண்டு முதல் மதிப்பெண்கள் அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
சென்னை மாவட்டம், தேனாம்பேட்டையில் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் சார்பில் ஆசிரியர்களின் கருத்தரங்கு நடைபெற்றது. அதில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கொட்டையன் பங்கேற்றார். அந்நிகழ்வில் அவர் பேசும் போது, மாணவர்களுக்கு தமிழக அரசு அறிமுகப்படுத்தும் 256 பாடப்பிரிவுகள் அடங்கிய புதிய பாடத்திட்டத்தை குறித்து பேசினார். அதனைப் பயிலும் மாணவர்கள் எந்த வகையான தேர்வாக இருந்தாலும் எளிதில் வெல்லமுடியும் என தெரிவித்தார்.

மேலும், பேசிய அவர், மாணவர்கள் கல்வியோடு சேர்த்து மரம் வளர்ப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். மரம் வளர்க்கும் ஒவ்வொரு மாணவருக்கும் பாடத்திற்கு 2 மதிப்பெண்கள் வீதம் ஆறு படத்திற்கு சேர்த்து 12 மதிப்பெண்கள் அடுத்த கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்த இருக்கிறோம், என்றார்.