திருப்பூர் : மகாத்மா காந்தியின் 71-வது நினைவு தினத்தை முன்னிட்டு, திருப்பூரில் சமூக நல்லிணக்க இயக்கம் சார்பில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து அமைதி உறுதிமொழி ஏற்கப்பட்டது.
திருப்பூர் : மகாத்மா காந்தியின் 71-வது நினைவு தினத்தை முன்னிட்டு, திருப்பூரில் சமூக நல்லிணக்க இயக்கம் சார்பில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து அமைதி உறுதிமொழி ஏற்கப்பட்டது.

மகாத்மா காந்தியின் 71-வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சமூக நல்லிணக்க இயக்கம் சார்பில் திருப்பூர் மாநகராட்சி அருகே உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், மத்தியில் ஆளுகின்ற பா.ஜ.க.வை அகற்ற காந்தியின் நினைவு தினத்தில் உறுதிமொழி எடுத்து, அதற்கான பணிகளை முன்னெடுக்க வேண்டும் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில், தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட்,“சமூக நல்லிணக்க இயக்கம்” அரசியலுக்கு அப்பாற்பட்டு மதச்சார்பின்மை, மனிதநேய பண்பாடு, மதநல்லிணக்கம் ஆகியவற்றுக்கான பொது அமைப்பு, அரசியல் பிரமுகர்கள் உள்பட பல்வேறு அமைப்புகள் பல்வேறு துறைகளைச் சேர்ந்தோர் கலந்து கொண்டனர்.

மகாத்மா காந்தியின் 71-வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சமூக நல்லிணக்க இயக்கம் சார்பில் திருப்பூர் மாநகராட்சி அருகே உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், மத்தியில் ஆளுகின்ற பா.ஜ.க.வை அகற்ற காந்தியின் நினைவு தினத்தில் உறுதிமொழி எடுத்து, அதற்கான பணிகளை முன்னெடுக்க வேண்டும் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில், தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட்,“சமூக நல்லிணக்க இயக்கம்” அரசியலுக்கு அப்பாற்பட்டு மதச்சார்பின்மை, மனிதநேய பண்பாடு, மதநல்லிணக்கம் ஆகியவற்றுக்கான பொது அமைப்பு, அரசியல் பிரமுகர்கள் உள்பட பல்வேறு அமைப்புகள் பல்வேறு துறைகளைச் சேர்ந்தோர் கலந்து கொண்டனர்.