நீலகிரி : இங்கிலாந்து நாட்டு தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்ட ஆவணப்படத்தில் நீலகிரி மலை ரயிலைக் கண்டு, அதில் பயணம் செய்ய ஆசைப்பட்டு வந்த வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகள் உதகை முதல் மேட்டுப்பாளையம் வரை மகிழ்ச்சியுடன் பயணித்தனர்.
நீலகிரி : இங்கிலாந்து நாட்டு தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்ட ஆவணப்படத்தில் நீலகிரி மலை ரயிலைக் கண்டு, அதில் பயணம் செய்ய ஆசைப்பட்டு வந்த வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகள் உதகை முதல் மேட்டுப்பாளையம் வரை மகிழ்ச்சியுடன் பயணித்தனர்.
இங்கிலாந்து நாட்டில் உள்ள முன்னணி தொலைக்காட்சியான பி.பி.சி.,யில் நீலகிரி மலை ரயில் குறித்த ஆவணப்படம் அண்மையில் ஒளிபரப்பப்பட்டுள்ளது. இதனைப் பார்த்த அங்குள்ள சுற்றுலாப்பயணிகள் நீலகிரி மலை ரயிலில் பயணிக்க வேண்டும் என முடிவு செய்துள்ளனர்.

இதையடுத்து, நீலகிரி மாவட்டத்திற்கு 31 பேர் கொண்ட குழுவினர் சுற்றுலா வந்துள்ளனர். இரண்டு நாட்கள் உதகை, குன்னூர் ஆகிய இடங்களில் தங்கி பல்வேறு சுற்றுலாத்தலங்களை சுற்றிப் பார்த்தவர்கள் பின்பு தாங்கள் விரும்பிய நீலகிரி மலை ரயில் மூலம் இன்று மேட்டுப்பாளையத்திற்குப் பயணித்தனர்.
மேலும், அண்மைக்காலமாக வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் சிறப்பு மலை ரயிலில் பயணிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவதால் நீலகிரி மலை ரயில் சர்வதேச அளவில் மேன்மேலும் பிரபலமடைந்து வருவது தெளிவாக தெரிகிறது.