கோவை : மனவளர்ச்சி குன்றிய மாணவர்களை சிறந்த மாணக்கர்களாக மாற்றுவது மிகவும் கடும் சவால் நிறைந்தது என பெண்கள் தன்னார்வ சேவை சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
கோவை : மனவளர்ச்சி குன்றிய மாணவர்களை சிறந்த மாணக்கர்களாக மாற்றுவது மிகவும் கடும் சவால் நிறைந்தது என பெண்கள் தன்னார்வ சேவை சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
கோவையில் செயல்பட்டு வரும் மனவளர்ச்சி இல்லாத மாணவர்களுக்கான சிறப்பு பள்ளியில் 55 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு பாடம் கற்றுத்தர சிறப்பு ஆசிரியர்கள் 6 பேர் உள்ளனர். தொழில் நுட்ப நிபுணர், பேச்சு பயிற்சியாளர், சிகிச்சையாளர் ஆகியோர், இந்த மாணவர்களுக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளையும் அளிக்கின்றனர். மேலும், மாணவர்களுக்கு தேவைப்படும் உபகரணங்களும் வாங்கப்பட்டு, அவர்களுக்கான முழு பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது.

அதோடு, இந்தக் குழந்தைகள் காகிதப் பைகள் தயாரித்தல், கிரீட்டிங் கார்டுகள், தபால் கவர்கள் மற்றும் மாலைகள் என பல்வேறு பொருட்களை தயாரிக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, கடந்த ஆண்டு 8 மாணவர்கள் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினர்.
அவர்கள் அனைவரும் 60 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று ஆச்சயர்படச் செய்துள்ளனர். இந்த நிலையில், இந்த ஆண்டு 18 மாணவர்கள் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத உள்ளனர். இவர்களும், மனவளர்ச்சியை குறையாக எண்ணாமல், சாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவையில் செயல்பட்டு வரும் மனவளர்ச்சி இல்லாத மாணவர்களுக்கான சிறப்பு பள்ளியில் 55 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு பாடம் கற்றுத்தர சிறப்பு ஆசிரியர்கள் 6 பேர் உள்ளனர். தொழில் நுட்ப நிபுணர், பேச்சு பயிற்சியாளர், சிகிச்சையாளர் ஆகியோர், இந்த மாணவர்களுக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளையும் அளிக்கின்றனர். மேலும், மாணவர்களுக்கு தேவைப்படும் உபகரணங்களும் வாங்கப்பட்டு, அவர்களுக்கான முழு பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது.

அதோடு, இந்தக் குழந்தைகள் காகிதப் பைகள் தயாரித்தல், கிரீட்டிங் கார்டுகள், தபால் கவர்கள் மற்றும் மாலைகள் என பல்வேறு பொருட்களை தயாரிக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, கடந்த ஆண்டு 8 மாணவர்கள் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினர்.
அவர்கள் அனைவரும் 60 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று ஆச்சயர்படச் செய்துள்ளனர். இந்த நிலையில், இந்த ஆண்டு 18 மாணவர்கள் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத உள்ளனர். இவர்களும், மனவளர்ச்சியை குறையாக எண்ணாமல், சாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.