கோடநாடு கொள்ளை வழக்கு : சயான், மனோஜ் ஆகியோரை பிப்.,2-ம் தேதி மீண்டும் ஆஜராக உத்தரவு

கோடநாடு கொள்ளை மற்றும் கொலை சம்பவம் தொடர்பான வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் சயான் மற்றும் மனோஜ் ஆகியோரை பிப்.,2-ம் தேதி மீண்டும் ஆஜராக உதகை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோடநாடு கொள்ளை மற்றும் கொலை சம்பவம் தொடர்பான வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் சயான் மற்றும் மனோஜ் ஆகியோரை பிப்.,2-ம் தேதி மீண்டும் ஆஜராக உதகை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 



கோடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் சயான் மற்றும் மனோஜ் ஆகியோருக்கு ஏற்கனவே வரும் பிப்ரவரி 2 தேதி வரை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இவர்கள் முதலமைச்சர் குறித்து ஆதாரமற்ற புகார்களை கூறி வருவதால், இருவரின் ஜாமீனை ரத்து செய்யக் கூறி அரசு தரப்பு வழக்கறிஞர் பால நந்தகுமார் உதகை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 

இதனைத் தொடர்ந்து, இன்று இருவரையும் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, சயான் மற்றும் மனோஜ் இருவரும் உதகை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். அப்போது, இருதரப்பு வாதங்களையும் நீதிபதி கேட்டறிந்தார். 

இந்த வழக்கு மிக முக்கியமானதால், கால அவகாசம் தரக் கூடாது என அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வரும் பிப்ரவரி 2-ம் தேதி சயான் மற்றும் மனோஜை மீண்டும் நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...