கோவை : பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவை ஏற்று இன்று பணிக்கு திரும்பாத 447 ஆசிரியர்களின் பணியிடங்கள், காலிப் பணியிடங்களாக அறிவிக்கப்பட்டது.
கோவை : பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவை ஏற்று இன்று பணிக்கு திரும்பாத 447 ஆசிரியர்களின் பணியிடங்கள், காலிப் பணியிடங்களாக அறிவிக்கப்பட்டது.
9 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பு (ஜாக்டோ- ஜியோ) சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த 22-ந் தேதி முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆசிரியர்களின் தொடர் போராட்டத்தால் பள்ளிக் கல்வி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளாத அரசு, அவர்களை பணிக்குத் திருப்ப அரசு தொடர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக தமிழக பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் அறிவிப்பு ஒன்றை நேற்று வெளியிட்டது.
அந்த அறிக்கையில், 'போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் இன்று (ஜன.,29) காலை 9 மணிக்குள் பணிக்குத் திரும்பாவிட்டால், அவர்களுடைய பணியிடங்கள் காலியிடங்களாக அறிவிக்கப்படும். அந்தப் பணியிடங்கள் அரசின் மூலம் தற்காலிக பணியாளர்களால் நிரப்பப்படும்,' என போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால், இன்றைய தினம் தமிழகம் முழுவதும் 95 சதவீத ஆசிரியர்களே பணிக்கு திரும்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. எஞ்சியவர்கள் கோவை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை முதலே மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், உத்தரவை ஏற்று பணிக்கு திரும்பாத 447 ஆசிரியர்களின் பணியிடங்களை, காலிப் பணியிடங்களாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. அறிவிக்கப்பட்ட காலிப் பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
9 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பு (ஜாக்டோ- ஜியோ) சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த 22-ந் தேதி முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆசிரியர்களின் தொடர் போராட்டத்தால் பள்ளிக் கல்வி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளாத அரசு, அவர்களை பணிக்குத் திருப்ப அரசு தொடர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக தமிழக பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் அறிவிப்பு ஒன்றை நேற்று வெளியிட்டது.
அந்த அறிக்கையில், 'போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் இன்று (ஜன.,29) காலை 9 மணிக்குள் பணிக்குத் திரும்பாவிட்டால், அவர்களுடைய பணியிடங்கள் காலியிடங்களாக அறிவிக்கப்படும். அந்தப் பணியிடங்கள் அரசின் மூலம் தற்காலிக பணியாளர்களால் நிரப்பப்படும்,' என போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால், இன்றைய தினம் தமிழகம் முழுவதும் 95 சதவீத ஆசிரியர்களே பணிக்கு திரும்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. எஞ்சியவர்கள் கோவை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை முதலே மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், உத்தரவை ஏற்று பணிக்கு திரும்பாத 447 ஆசிரியர்களின் பணியிடங்களை, காலிப் பணியிடங்களாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. அறிவிக்கப்பட்ட காலிப் பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.