கோவை : கோவையில் பொறியாளரின் வீட்டுக் கதவை உடைத்து 20 பவுன் நகை மற்றும் ரூ. 10,000 கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோவை : கோவையில் பொறியாளரின் வீட்டுக் கதவை உடைத்து 20 பவுன் நகை மற்றும் ரூ. 10,000 கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சிங்காநல்லூர் இருகூர் பகுதியைச் சேர்ந்த கருணாநிதி என்பவரது மகன் பிரசன்னகுமார் (37). இவர், கோவையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் டிசைனிங் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், பிரசன்ன குமார், தனது குடும்பத்துடன் சொந்த ஊர் சென்று விட்டு, இன்று காலை வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர், உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த துணிகள் அனைத்தும் கலைக்கப்பட்ட நிலையில் இருந்தன. தொடர்ந்து, பீரோவை ஆராய்ந்த போது, அங்கு வைக்கப்பட்டிருந்த 25 சவரன் நகை மற்றும் ரூ. 10,000 கொள்ளை போனது தெரியவந்தது. இதையடுத்து, தகவலின் பேரில் வந்த சிங்காநல்லூர் போலீசார், கைரேகை நிபுணர் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் வீடு முழுவதும் சோதனை செய்து தடயங்களை தேடினர். மேலும், இருகூர் பகுதியை ஒட்டியுள்ள பல்வேறு பகுதிகளில் இருக்கும் சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் குற்றவாளியை அடையாளம் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
சிங்காநல்லூர் இருகூர் பகுதியைச் சேர்ந்த கருணாநிதி என்பவரது மகன் பிரசன்னகுமார் (37). இவர், கோவையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் டிசைனிங் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், பிரசன்ன குமார், தனது குடும்பத்துடன் சொந்த ஊர் சென்று விட்டு, இன்று காலை வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர், உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த துணிகள் அனைத்தும் கலைக்கப்பட்ட நிலையில் இருந்தன. தொடர்ந்து, பீரோவை ஆராய்ந்த போது, அங்கு வைக்கப்பட்டிருந்த 25 சவரன் நகை மற்றும் ரூ. 10,000 கொள்ளை போனது தெரியவந்தது. இதையடுத்து, தகவலின் பேரில் வந்த சிங்காநல்லூர் போலீசார், கைரேகை நிபுணர் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் வீடு முழுவதும் சோதனை செய்து தடயங்களை தேடினர். மேலும், இருகூர் பகுதியை ஒட்டியுள்ள பல்வேறு பகுதிகளில் இருக்கும் சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் குற்றவாளியை அடையாளம் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.