கோவை : தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்காக இதுவரை 2,500-க்கும் மேற்பட்டோர் கோவை முதன்மை கல்வி அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ள நிலையில், அரசு ஆசிரியர்களுக்கு இணையாக தங்களால் பணியாற்ற முடியும் என விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
கோவை : தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்காக இதுவரை 2,500-க்கும் மேற்பட்டோர் கோவை முதன்மை கல்வி அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ள நிலையில், அரசு ஆசிரியர்களுக்கு இணையாக தங்களால் பணியாற்ற முடியும் என விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் மேற்கொண்டு வரும் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று 7-வது நாளாக தொடர்கிறது. இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டுமென அரசின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், அரசின் வேண்டுகோளை ஏற்காத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பாத நிலையில், தற்காலிக ஆசிரியர்களைப் பணி நியமனம் செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோவை முதன்மை கல்வி அலுவலகத்தில் இன்று 3-வது நாளாக தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் விநியோகிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 2,500-க்கும் மேற்பட்டோர் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.

"இதுவரை யாருக்கும் எந்தவொரு பள்ளியிலும் தற்காலிக பணி நியமனம் ஆணை கொடுக்கப்படவில்லை. வேலை இல்லாத தங்களுக்கு இந்த வேலை நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். அரசு அளிக்கும் ரூ. 10,000 தொகுப்பூதியம் தற்போதைக்கு தங்களுக்கு போதுமானதாக இருக்கும். மேலும், தற்போது பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இணையாக எங்களால் பணிபுரிய முடியும். எங்களுக்கு ஏற்கனவே விதமான கற்பித்தல் பயிற்சிகள் அளிக்கப்பட்டு இருப்பதால், எங்களால் பணியை சிறப்பாக செய்ய முடியும்," என தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.