கோவை மாநகராட்சி அலுவலகம் உட்பட முக்கிய இடங்களில் குடியரசு தினக் கொண்டாட்டம்

கோவை : கோவை மாநகராட்சி அலுவலகம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 70-வது குடியரசு தின விழாவையொட்டி இன்று தேசிய கொடியேற்றப்பட்டது.

கோவை : கோவை மாநகராட்சி அலுவலகம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 70-வது குடியரசு தின விழாவையொட்டி இன்று தேசிய கொடியேற்றப்பட்டது. 

கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் 70-வது குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற்றது. மாநகராட்சி ஆணையாளர் க.விஜயகார்த்திகேயன் மகாத்மா காந்தியடிகளின் திருஉருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், விக்டோரியா அரங்க வளாகத்தில் தேசியக் கொடியினை அவர் ஏற்றி வைத்தார். 



இவ்விழாவில் மாநகராட்சி துணை ஆணையாளர் ப.காந்திமதி முன்னிலை வகித்தார். இதைத் தொடர்ந்து, செல்வபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, ஆர்.எஸ்.புரம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அனுப்பர்பாளையம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த சாரணர்படை மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையினை மாநகராட்சி ஆணையாளர் ஏற்றுக்கொண்டார். 

பின்னர், கோவை மாநகராட்சியில் 25 ஆண்டுகள் அப்பழுக்கின்றி பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் 24 பேருக்கு வெகுமதியாக தலா ரூ. 2,000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாநகராட்சி ஆணையாளர் க.விஜயகார்த்திகேயன் வழங்கினார். இதைத் தொடர்ந்து, பரதநாட்டிய பயிற்றுனர் குழுவின் மாணவியர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி மற்றும் மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.

இதேபோல, குடியரசு தினத்தையொட்டி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் நீ. குமார், தேசியக் கொடி ஏற்றி குடியரசு தின விழா உரையாற்றினார். 



அப்போது, 100 ஆண்டுகளுக்கு மேலான தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் இந்தியாவில் முதன்மையான பல்கலைக்கழகமாகவும் உலக அளவில் பட்டியலிடப்பட்ட பல்கலைக்கழகங்களில் ஒன்றாகவும் இருப்பது நமக்கு பெருமை சேர்ப்பதாக அவர் கூறினார். 



இதைத் தொடர்ந்து, சிறந்த தேசிய மாணவர் படை மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. சிறுவர், சிறுமியர் மற்றும் மாணவர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்றன. 



Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...