கோவையில் 10-ம் தேதி நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான கால்கோல் நடும் விழா

கோவை : தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி கோவையில் அடுத்த மாதம் 10-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான கால்கோல் நடும் விழா செட்டிபாளையம் திடலில் இன்று நடைபெற்றது.


கோவை : தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி கோவையில் அடுத்த மாதம் 10-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான கால்கோல் நடும் விழா செட்டிபாளையம் திடலில் இன்று நடைபெற்றது.



கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவை ஜல்லிக்கட்டு சங்கம் சார்பாக பிப்ரவரி 10-ம் தேதி, கோவையில் ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கால்கோல் மற்றும் தொடக்க பூஜை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவிருக்கும், எல்&டி பைபாஸ் சாலையில் உள்ள செட்டிப்பாளையம் திடலில், நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்றது.



இந்நிகழ்வில், அ.தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி. அருண்குமார், அம்மன் அர்ச்சுனன், கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன், மாநகராட்சி துணை ஆணையர் காந்திமதி, கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண், கோவை மாநகர போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் சுஜித் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் குறித்து கோவை ஜல்லிக்கட்டு சங்கத்தின் செயலாளர் கூறியதாவது :- நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, கோவையைச் சேர்ந்த பல்வேறு ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்டுள்ள 'கோவை ஜல்லிக்கட்டு சங்கம்', கோவை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துகிறது. சென்ற வருடத்தைப் போலவே, இந்த ஆண்டும் கோவை மக்கள் ஜல்லிக்கட்டை நேரில் பார்க்க ஆர்வத்துடன் உள்ளனர். இதுவரை 700 ஜல்லிக்கட்டு காளைகளும், 400-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பதிவு செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு பார்வையாளர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது. அதனைக் கருத்தில் கொண்டு இந்த முறை அனைவரும் ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன, என்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...