கோவை : சூலூர் அருகே உள்ள இந்திய ராணுவ விமானப்படை தளத்தை புகைப்படம் எடுத்த வடமாநில இளைஞரை சூலூர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
கோவை : சூலூர் அருகே உள்ள இந்திய ராணுவ விமானப்படை தளத்தை புகைப்படம் எடுத்த வடமாநில இளைஞரை சூலூர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
சூலூரில் இந்திய ராணுவ விமானப்படை தளம் உள்ளது. இங்கு புதிய ரக விமானம் மற்றும் விமானம் பழுது நீக்கும் தளம், விமான பயிற்சி தளம் ஆகியவை உள்ளன. பாதுகாப்புமிக்க பகுதியான இங்கு வீடியோ, புகைப்படம் எடுக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. சூலூர் கலங்கல் பகுதியில் இருந்து விமானப்படை வளாகத்தில் உள்ள விமான ஓடுதள பாதையை நேற்று முன்தினம் ஒரு இளைஞர் தனது செல்போன் மூலம் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார்.
இதை கண்காணிப்பு கேமரா மூலம் பார்த்த விமானப்படை வீரர்கள் சம்பந்தப்பட்ட இளைஞரைப் பிடித்து விசாரித்தனர். மேலும், அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்தனர். விசாரணையில் பிடிபட்ட இளைஞர் பீகார் மாநிலத்தை சேர்ந்த ரமேஷ்னோயல் (21) என்பவர் எனத் தெரிய வந்தது. பிடிபட்ட இளைஞரை விமானப்படை வீரர்கள், சூலூர் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். சூலூர் போலீஸார் அந்த இளைஞரிடம் எதற்காகப் புகைப்படம் எடுத்தார் என்றும், அவரின் பின்னணி என்ன என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சூலூரில் இந்திய ராணுவ விமானப்படை தளம் உள்ளது. இங்கு புதிய ரக விமானம் மற்றும் விமானம் பழுது நீக்கும் தளம், விமான பயிற்சி தளம் ஆகியவை உள்ளன. பாதுகாப்புமிக்க பகுதியான இங்கு வீடியோ, புகைப்படம் எடுக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. சூலூர் கலங்கல் பகுதியில் இருந்து விமானப்படை வளாகத்தில் உள்ள விமான ஓடுதள பாதையை நேற்று முன்தினம் ஒரு இளைஞர் தனது செல்போன் மூலம் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார்.
இதை கண்காணிப்பு கேமரா மூலம் பார்த்த விமானப்படை வீரர்கள் சம்பந்தப்பட்ட இளைஞரைப் பிடித்து விசாரித்தனர். மேலும், அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்தனர். விசாரணையில் பிடிபட்ட இளைஞர் பீகார் மாநிலத்தை சேர்ந்த ரமேஷ்னோயல் (21) என்பவர் எனத் தெரிய வந்தது. பிடிபட்ட இளைஞரை விமானப்படை வீரர்கள், சூலூர் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். சூலூர் போலீஸார் அந்த இளைஞரிடம் எதற்காகப் புகைப்படம் எடுத்தார் என்றும், அவரின் பின்னணி என்ன என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.