குன்னூரில் வருவாய் துறை சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி : சமூக ஆர்வலர்கள் விமர்சனம்

நீலகிரி : குன்னூரில் வருவாய் துறையின் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்ற நிலையில், இதில், பொதுமக்களையும் இணைத்திருந்தால் பேரணியின் நோக்கம் முழுமை அடைந்திருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நீலகிரி : குன்னூரில் வருவாய் துறையின் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்ற நிலையில், இதில், பொதுமக்களையும் இணைத்திருந்தால் பேரணியின் நோக்கம் முழுமை அடைந்திருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

விரைவில் வரவுள்ள மக்களவை தேர்தலையொட்டி, பல்வேறு மாவட்டங்களில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, குன்னூரில் வருவாய் துறையின் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 



குன்னூர் சிம்ஸ் பூங்காவில் தொடங்கிய இந்தப் பேரணி பெட்போர்டு, லாலி மருத்துவமனை, வழியாக குன்னூர் தீயணைப்பு நிலையம் வந்தடைந்தது. இதில், வருவாய் துறையினர், கல்லூரி மாணவிகள், ஐ.டி.ஐ. மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்றனர்.

"18 வயதினை நிரம்பாத மாணவ, மாணவிகளைக் கொண்டு கண்துடைப்பிற்காகவே இதுபோன்ற விழிப்புணர்வு பேரணிகள் நடத்தப்படுகின்றன. ஆட்டோ ஓட்டுநர்கள், டாக்சி ஓட்டுநர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழிலாளர்கள் மற்றும் தன்னார்வ அமைப்பினரைக் கொண்டு நடத்தும்போது, விழிப்புணர்வு ஊர்வலத்தின் நோக்கம் முழுமை அடையும்," என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...