கோவை : ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி பள்ளியின் ஹாக்கி மைதானத்தில் உள்ள புல்தரைக்கு மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி பள்ளியின் ஹாக்கி மைதானத்தில் உள்ள புல்தரைக்கு மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளிக்கு சொந்தமான ஹாக்கி புல்தரை நீண்ட நாளாக பயன்படுத்தாமல் இருந்தது. சில வருடங்களாகச் சர்ச்சைக்குள்ளாகி வரும் இந்த இடத்தில் ஹாக்கி மட்டைகள் மற்றும் பந்துகள் புரண்டு வெகுநாளாகிறது.
இந்நிலையில், இந்த மைதானத்தில் உள்ளூர் குழந்தைகள் கிரிக்கெட் விளையாடப் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், சிலர் தங்கள் கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலமாகப் பயன்படுத்தி வருகின்றனர். இங்கு, எந்த பாதுகாப்பு ஊழியரும் நியமிக்கப்படாததால் சமுதாய விரோரச் செயல்கள் வெகு இயல்பாக நடந்தேறி வருகின்றன.
இதனிடையே, இங்கு ஒரு ஹாக்கி மைதானத்தை உருவாக்கக் கடந்த 2015 -ம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துடன் இணைந்து கோவை மாநகராட்சி முயற்சி மேற்கொண்டது. ஆனால், அதன் மேற்படி வேலைகள் ஏதும் நடைபெறவில்லை. இந்நிலையில், இரண்டாவது முறையாக இந்தப் புல்தரை மர்ம நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, தகவல் அறிந்து விரைந்த கோவை தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.

கோவை மாவட்டம், ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளிக்கு சொந்தமான ஹாக்கி புல்தரை நீண்ட நாளாக பயன்படுத்தாமல் இருந்தது. சில வருடங்களாகச் சர்ச்சைக்குள்ளாகி வரும் இந்த இடத்தில் ஹாக்கி மட்டைகள் மற்றும் பந்துகள் புரண்டு வெகுநாளாகிறது.
இந்நிலையில், இந்த மைதானத்தில் உள்ளூர் குழந்தைகள் கிரிக்கெட் விளையாடப் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், சிலர் தங்கள் கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலமாகப் பயன்படுத்தி வருகின்றனர். இங்கு, எந்த பாதுகாப்பு ஊழியரும் நியமிக்கப்படாததால் சமுதாய விரோரச் செயல்கள் வெகு இயல்பாக நடந்தேறி வருகின்றன.
இதனிடையே, இங்கு ஒரு ஹாக்கி மைதானத்தை உருவாக்கக் கடந்த 2015 -ம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துடன் இணைந்து கோவை மாநகராட்சி முயற்சி மேற்கொண்டது. ஆனால், அதன் மேற்படி வேலைகள் ஏதும் நடைபெறவில்லை. இந்நிலையில், இரண்டாவது முறையாக இந்தப் புல்தரை மர்ம நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, தகவல் அறிந்து விரைந்த கோவை தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.