2-வது திருமணம் செய்துகொண்ட கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி பெண் தர்ணா

திருப்பூர்: திருப்பூரில் இரண்டாவது திருமணம் செய்துகொண்டதால், தன்னை ஒதுக்கி வைக்கும் கணவரோடு சேர்த்தி வைக்கக்கோரி பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர்: திருப்பூரில் இரண்டாவது திருமணம் செய்துகொண்டதால், தன்னை ஒதுக்கி வைக்கும் கணவரோடு சேர்த்தி வைக்கக்கோரி பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

திருப்பூர் தாராபுரம் சாலை செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி. இவருக்கும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் பால்வினை நோய் தடுப்புப்பிரிவில் ஊழியராக பணிபுரிந்து வரும் அழகுராஜா என்பவருக்கும் கடந்த 2008-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உட்பட 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், அழகுராஜாவுக்கும், அவருடன் பணிபுரிந்து வரும் கோமதி என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டதால், திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. 



தற்போது, இருவரும் திருமணம் செய்துகொண்டு தன்னையும், குழந்தைகளையும் கவனிக்காமல் ஒதுக்கி வைத்துவிட்டு அப்பெண்ணுடன் வாழ்ந்து வருவதாக சாதி வேதனை தெரிவித்துள்ளார். வாழ்வாதாரம் இல்லாமல் இருக்கும் தன்னை, தனது கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் வாழ்வாதரம் ஏற்பாடு செய்துதர வேண்டும் எனக்கோரி பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். 

அப்போது, காவல்துறையினர் தலையிட்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தையடுத்து, அவர் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்துவிட்டுச் சென்றார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...