கோவையில் கிராமசபை கூட்டம் நடத்திய தி.மு.க. நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு

கோவை : கிராமசபை கூட்டம் நடத்தியது தொடர்பாக தி.மு.க., நிர்வாகிகள் மீது ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை : கிராமசபை கூட்டம் நடத்தியது தொடர்பாக தி.மு.க., நிர்வாகிகள் மீது ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆலாந்துறை அருகே உள்ள ஜாகிர் நாயக்கன்பாளையம் பத்திரகாளியம்மன் கோவில் மைதானத்தில் கடந்த18-ம் தேதி தி.மு.க., சார்பில் கிராமசபைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில், கோவை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சி.ஆர்.ராமச்சந்திரன், தொண்டாமுத்தூர் ஒன்றிய செயலாளர் சேனாதிபதி ஆகியோர் கலந்து கொண்டு, அ.தி.மு.க. ஆட்சி குறித்து பேசினர்.

இதுதொடர்பாக, அப்பகுதி அ.தி.மு.க. கிளை செயலாளர் நாகராஜ் (55), ஆலாந்துறை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதில், அ.தி.மு.க. ஆட்சி குறித்து பேசியதாகவும், அதேபோல, பொதுமக்களின் ஒற்றுமையைக் கெடுக்கும் வகையில் பேசியதாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, இந்தப் புகாரின் பேரில் போலீசார் சி.ஆர்.ராமச்சந்திரன், சேனாதிபதி ஆகியோர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதேபோல, அனுமதியில்லாமல் கிராமசபைக் கூட்டம் நடத்திய தி.மு.க. மாவட்ட செயலாளர் சி.ஆர்.ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர் சேனாதிபதி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜாகிர்நாயக்கன்பாளையம் வி.ஏ.ஓ ஜெகதீஷ், ஆலாந்துறை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் இரண்டு பேரின் மீது இரு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...