நீலகிரி அணைகளில் மழைநீர் குறைந்ததால் நீர் மின் நிலையங்களில் மின் உற்பத்தி பாதிப்பு

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் பருவ மழை குறைந்ததால் நீர்மின் நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் பருவ மழை குறைந்ததால் நீர்மின் நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

நீலகிரி மாவட்டத்தில் முக்கிய அணைகளாக அப்பர் பவானி, அவலாஞ்சி, எமரால்டு, குந்தா, கெத்தை உள்ளிட்ட 12 அணைகள் உள்ளன. இந்த அணைகளில் தேக்கி வைக்கப்படும் நீரைக் கொண்டு அவலாஞ்சி, குந்தா, கெத்தை, பைக்காரா உள்ளிட்ட நீர் மின்நிலையங்களில் தினசரி 834 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 

இந்நிலையில், மின் உற்பத்தி செய்யப்பட்டு உபரியாகச் செல்லும் தண்ணீர் குந்தா, கெத்தை, பரளி மற்றும் பவானி வழியாக விவசாயம் உள்ளிட்ட பிற தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. நீலகிரியில் உள்ள மின்நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு அங்கு பெய்யும் பருவமழையே முக்கிய காரணமாகும். ஆனால், கடந்த ஆண்டு நீலகிரி மாவட்டத்தில் பருவமழை ஓரளவு தான் பெய்தது. இதன் காரணமாக அணைகளில் நீர்மட்டம் உயரவில்லை. 



அப்பர்பவானி அணையின் மொத்த நீர்மட்டம் 210 அடி. ஆனால், தற்போது அணையில் 130 அடி தான் தண்ணீர் உள்ளது. இதற்கு அணைக்கு போதிய அளவு நீர்வரத்து இல்லாததே காரணம் ஆகும். இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. சில மாதங்களில் கோடை காலம் தொடங்க உள்ளதால் அப்பர்பவானி அணையில் மின் உற்பத்தி மேலும், பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...