கோவை : தொண்டாமுத்தூர் அருகே கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கல்வித்தகுதி முரண்பாட்டால் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கோவை : தொண்டாமுத்தூர் அருகே கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கல்வித்தகுதி முரண்பாட்டால் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கோவை சுண்டம்பாளையம். கலிக்கநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த நவீன்குமார் (29) என்பவர் கூலித் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சவுந்தர்யா (23) சிவில் என்ஜினீயரிங் படித்துள்ளார். இவர்களுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. அப்போது முதலே, கணவன் - மனைவிக்குள் கல்வித்தகுதி குறித்த மனக்கசப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பொங்கல் விழாவையொட்டி சவுந்தர்யா தனது தாய் வீட்டுக்கு சென்றிருந்தார். இப்படியிருக்க நேற்று மாலை அவர் மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், வந்த தொண்டாமுத்தூர் போலீசார் சவுந்தர்யாவின் பிரேதத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பினர்.
கணவர் 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளதால், அதிருப்தியில் மனமுடைந்து சவுந்தர்யா தற்கொலை செய்து இருக்கலாம் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். திருமணமாகி 2 மாதங்களே ஆனதால், ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெற்று வருகிறது.
கோவை சுண்டம்பாளையம். கலிக்கநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த நவீன்குமார் (29) என்பவர் கூலித் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சவுந்தர்யா (23) சிவில் என்ஜினீயரிங் படித்துள்ளார். இவர்களுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. அப்போது முதலே, கணவன் - மனைவிக்குள் கல்வித்தகுதி குறித்த மனக்கசப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பொங்கல் விழாவையொட்டி சவுந்தர்யா தனது தாய் வீட்டுக்கு சென்றிருந்தார். இப்படியிருக்க நேற்று மாலை அவர் மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், வந்த தொண்டாமுத்தூர் போலீசார் சவுந்தர்யாவின் பிரேதத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பினர்.
கணவர் 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளதால், அதிருப்தியில் மனமுடைந்து சவுந்தர்யா தற்கொலை செய்து இருக்கலாம் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். திருமணமாகி 2 மாதங்களே ஆனதால், ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெற்று வருகிறது.