கோத்தகிரியில் தனியார் தங்கும் விடுதியின் கிணற்றில் குழந்தையின் சடலம் மீட்பு

நீலகிரி : கோத்தகிரி அருகே தனியார் தங்கும் விடுதிக்கு சொந்தமான கிணற்றில் மர்மமான முறையில் குழந்தை இறந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

நீலகிரி : கோத்தகிரி அருகே தனியார் தங்கும் விடுதிக்கு சொந்தமான கிணற்றில் மர்மமான முறையில் குழந்தை இறந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

கோத்தகிரி அருகே உள்ள எம் கைகாட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி சஜிதா. இவர்களுக்கு சுபாஷினி (15), அர்சினி (4) ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். பிரபாகரன் கடந்த 5 மாதங்களுக்கு முன் இறந்து விட்டார். சஜிதா கண்ணேறிமுக்கு என்ற இடத்தில் ஒரு தனியார் விடுதியில் பணி செய்து வருகிறார். இவருக்கு குடிபழக்கம் மற்றும் தகாத உறவு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. 

நேற்று முன்தினம் தனது 4 வயது குழந்தை அர்சினியைக் காணவில்லை என சஜிதா போலீசில் புகார் கொடுத்தார். இந்த நிலையில், சஜிதா வேலை செய்யும் தங்கும் விடுதியின் கிணற்றில் அர்சினி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதையடுத்து, கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சஜிதாவை பிடித்து விசாரித்து வருகின்றனர். சஜிதாவின் தகாத உறவுக்கு அர்சினி இடையூறாக இருந்ததால், அவர் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா..? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...