நீலகிரி : முதுமலையில், 191 இடங்களில் தானியங்கி கேமராக்களை பொருத்தி புலிகள் கணக்கெடுப்பு பணியை வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
நீலகிரி : முதுமலையில், 191 இடங்களில் தானியங்கி கேமராக்களை பொருத்தி புலிகள் கணக்கெடுப்பு பணியை வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டம், முதுமலை, தெப்பக்காடு, கார்குடி, நெலக்கோட்டை, மசினகுடி வனச் சரகங்களில், 191 இடங்களில், தலா இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதன் உதவியோடு புலிகள் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது :- முதுமலையில், நடப்பு ஆண்டில் இரண்டு ச.கி.மீ., பரப்பளவுக்கு ஒரு இடம் வீதம், 191 இடங்களில் தலா இரண்டு கேமரா வைக்கப்பட்டுள்ளது. சுமார் 382 தானியங்கி கேமராக்களை புலிகள் கணக்கெடுப்புக்குப் பயன்படுத்தி வருகிறோம்.

இதையடுத்து, கேமராக்களில் பதிவாகும் படங்கள், காணொளிகள் 3 நாட்களுக்கு ஒருமுறை பதிவிறக்கம் செய்யப்படவுள்ளது. அதன் பின்பு அவைகள் ஆய்வு செய்யப்படும். இப்பகுதியைத் தொடர்ந்து முதுமலை வெளிவட்டம் பகுதியிலும், தானியங்கி கேமராக்கள் மூலம் புலிகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெறும். இந்த கணக்கெடுப்பு பணிகள் முடிந்ததும் புலிகள் எண்ணிக்கையின் நிலை குறித்து தகவல் தெரிவிக்கப்படும், என்றனர்.

நீலகிரி மாவட்டம், முதுமலை, தெப்பக்காடு, கார்குடி, நெலக்கோட்டை, மசினகுடி வனச் சரகங்களில், 191 இடங்களில், தலா இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதன் உதவியோடு புலிகள் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது :- முதுமலையில், நடப்பு ஆண்டில் இரண்டு ச.கி.மீ., பரப்பளவுக்கு ஒரு இடம் வீதம், 191 இடங்களில் தலா இரண்டு கேமரா வைக்கப்பட்டுள்ளது. சுமார் 382 தானியங்கி கேமராக்களை புலிகள் கணக்கெடுப்புக்குப் பயன்படுத்தி வருகிறோம்.

இதையடுத்து, கேமராக்களில் பதிவாகும் படங்கள், காணொளிகள் 3 நாட்களுக்கு ஒருமுறை பதிவிறக்கம் செய்யப்படவுள்ளது. அதன் பின்பு அவைகள் ஆய்வு செய்யப்படும். இப்பகுதியைத் தொடர்ந்து முதுமலை வெளிவட்டம் பகுதியிலும், தானியங்கி கேமராக்கள் மூலம் புலிகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெறும். இந்த கணக்கெடுப்பு பணிகள் முடிந்ததும் புலிகள் எண்ணிக்கையின் நிலை குறித்து தகவல் தெரிவிக்கப்படும், என்றனர்.