திருப்பூர் : பேட்ட திரைப்படத்தை பெண்கள், குழந்தைகள் என குடும்பம், குடும்பமாக பார்த்துச் செல்வது மகிழ்ச்சியளிப்பதாக அப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்தார்.
திருப்பூர் : பேட்ட திரைப்படத்தை பெண்கள், குழந்தைகள் என குடும்பம், குடும்பமாக பார்த்துச் செல்வது மகிழ்ச்சியளிப்பதாக அப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்தார்.
கடந்த 10-ம் தேதி இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள 'பேட்ட' திரைப்படம் வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், திருப்பூரில் பேட்ட திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கும் திரையரங்கில் ரசிகர்களை பார்ப்பதற்காக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வருகை தந்திருந்தார்.

அப்போது, ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தபின் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அவர் கூறியதாவது :- பேட்ட திரைப்படம் வெளியான பிறகு, நான் சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்தபோது, அவர் எனக்கு மகிழ்ச்சியை தெரிவித்தார். இந்தப் பொங்கலில் பெண்கள், குழந்தைகள் என குடும்பம் குடும்பமாக படத்தை பார்த்துச் செல்வது தனிப்பட்ட முறையில் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
சமூக வலைதளங்களின் விமர்சனங்கள் இன்று முக்கியமாக இருக்கிறது. சமூக கருத்துக்களை படங்களில் வைத்ததனால் எந்தவித எதிர்ப்புகளும் இல்லை. மாறாக, நல்ல கருத்துக்களை வைத்துள்ளோம், என்றார்.
முன்னதாக, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜை வரவேற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சக்தி சுப்பிரமணியம், "படம் வெளியாகி 11-வது நாளான ஞாயிற்றுக்கிழமையோடு, இத்திரைப்படம் ரூ. 100 கோடி வர்த்தகத்தை அடையும்," எனத் தெரிவித்தார்.
