நீலகிரி : நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமில் யானை பொங்கல் நிகழ்ச்சி உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
நீலகிரி : நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமில் யானை பொங்கல் நிகழ்ச்சி உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
முதுமலையில் உள்ள யானைகள் முகாமில் 26 யானைகளை வனத்துறையினர் வளர்த்து வருகின்றனர். இவற்றிற்கு சாலையில் விழும் மரங்ளை அப்புறப்படுத்துவது, மேலும் வனங்களில் இருந்து வெளியேறும் யானைகளுக்கு பயிற்சி அளிப்பது, சுற்றுலாப் பயணிகளை சுமந்து கொண்டு வனத்தை சுற்றி காட்டுவது உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின் போது, இந்த யானைகள் முகாமில் யானைப் பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம், அந்த வகையில், இந்த ஆண்டிற்கான பொங்கல் பண்டிகை நடைபெற்றது. இதில், யானைகளைக் குளிப்பாட்டி, அவற்றிற்குப் பிடித்த கரும்பு, பொங்கல், சுண்டல். உள்ளிட்டவற்றை வனத்துறை சார்பில் வழங்கப்பட்டது. மாலை 06.30 மணி அளவில் விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த பொங்கல் கொண்டாட்டம் 8 மணி வரை நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து, 26 யானைகளுக்கும், அதன் பாகன்கள் பொங்கலை கொடுத்து மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியில், முதுமலைக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.