கோவை : பொங்கல் பண்டிகையை அனன்யாஸ் நானா நானி பில்டர்ஸ் நிறுவனம், தனது வாடிக்கையாளர்கள் மற்றும் குடியிருப்புவாசிகளுடன் இணைந்து பாரம்பரிய முறையில் கொண்டாடியது.
கோவை : பொங்கல் பண்டிகையை அனன்யாஸ் நானா நானி பில்டர்ஸ் நிறுவனம், தனது வாடிக்கையாளர்கள் மற்றும் குடியிருப்புவாசிகளுடன் இணைந்து பாரம்பரிய முறையில் கொண்டாடியது.

தை திருநாள், பொங்கல் பண்டிகையை உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். இந்தத் திருநாளில், தமிழர்களின் அனைத்து வீடுகளின் வாசல்களில் கலர் கோலமிட்டும், கரும்புகளை வைத்து பொங்கலிட்டு, கடவுளுக்குப் படைத்து வழிபாடு நடத்துகின்றனர். அதோடு, தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கோவையில் பிரபலமான நானா நானி பில்டர்ஸ் நிறுவனம் சார்பில் வாடிக்கையாளர்கள் அல்லது தங்களது குடியிருப்பில் வசித்து வருபவர்களுடன் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத வகையில், இந்த ஆண்டு பிரம்மாண்டமாகக் கொண்டாடப்பட்டதாக நானா நானி பில்டர்ஸ் நிறுவனத்தினர் கூறுகின்றனர்.
வண்ண வண்ணமான கொடிகள், பாரம்பரிய மற்றும் பழங்கால உணவு வகைகள் என களைகட்டிய இந்தப் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம், தமிழ் கலாச்சார நடனமான பரை ஆட்டத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, உறியடித்தல், மல்லிகைப் பூ கோர்த்தல் உள்ளிட்ட பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், பெண்கள், ஆண்கள் என அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

"ஒவ்வொரு ஆண்டும் எங்களது வாடிக்கையாளர்கள் அல்லது எங்களது குடியிருப்பில் வசிப்பவர்களுக்காக பொங்கல் பண்டிகை சிறப்பு கொண்டாட்ட நிகழ்ச்சி நடத்தி வருகிறோம். ஆனால், கடந்த ஆண்டுகளைக் காட்டிலும், இந்த ஆண்டு கொண்டாட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது," என்கிறார் உமா யுவராஜ், நானா நானி பில்டர்ஸ் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர்.

இந்த நிகழ்ச்சியின் போது நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும், வண்ணமயமான நிகழ்ச்சிகளுடன் பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டம் நிறைவடைந்தது.