உதகை தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பொங்கல் கொண்டாட்டம் : சுற்றுலாப்பயணிகள் உற்சாகப் பங்கேற்பு

நீலகிரி : உதகையில், சுற்றுலாப் பயணிகளுடன் இணைந்து மாவட்ட ஆட்சியர் பொங்கல் விழாவினை மிகச்சிறப்பாக கொண்டாடினார்.

நீலகிரி : உதகையில், சுற்றுலாப் பயணிகளுடன் இணைந்து மாவட்ட ஆட்சியர் பொங்கல் விழாவினை மிகச்சிறப்பாக கொண்டாடினார். 



உதகையில் தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில் உதகை அரசு தாவிரவியல் பூங்காவில் சுற்றுலா பொங்கல் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் சுற்றுலாப் பயணிகளுடன் இணைந்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு விளையாட்டுகளில் கலந்து கொண்டார். 

ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் கலந்து கொண்டு, புதுப்பானையில் புத்தரிசி பொங்கலிட்டுப் பொங்கலோ பொங்கல் என மகிழ்ச்சி பொங்கல் கொண்டாடினர். 



மாவட்ட ஆட்சித் தலைவர் இன்ன சென்ட் திவ்யா, சுற்றுலா அலுவலர் ராஜன், தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் சிவசுப்ரமணிய சாம்ராஜ் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் புதுப்பானையில் தீ மூட்டி புத்தரிசி பொங்கலிட்டுக் கொண்டாடினர்.

சுற்றுலாப் பொங்கலையொட்டி, தாவரவியல் பூங்கா அலுவலக முன் ஊழியர்கள் போட்டிருந்த பல வண்ண கோலங்களை சுற்றுலாப்பயணிகள் பார்த்து ரசித்ததோடு செல்பி புகைப்படம் எடுத்தனர். 



சுற்றுலா பொங்கலையொட்டி பூங்காவிற்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளுக்கு சாக்கு பை பந்தயம், கயிறு இழுக்கும் போட்டி, எலுமிச்சை கரண்டி ஓட்டம் என நடத்தப்பட்ட போட்டிகளில் திரளான சுற்றுலாப் பயணிகள் கலந்து கொண்டனர்.



Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...