மதுரை : அவனியாபுரத்தில் நாளை நடைபெறவிருக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்காக இன்று மாடுபிடி வீரர்களுக்குத் தகுதி தேர்வு மற்றும் காப்பீடு பதிவு செய்யப்படுகிறது.
மதுரை : அவனியாபுரத்தில் நாளை நடைபெறவிருக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்காக இன்று மாடுபிடி வீரர்களுக்குத் தகுதி தேர்வு மற்றும் காப்பீடு பதிவு செய்யப்படுகிறது.
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு இரண்டு நாட்களுக்கு முன் நடைபெற்றது. இதில் பல இளைஞர்கள் ஆர்வத்துடன் காத்திருந்து பதிவு செய்து கொண்டனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டி நாளை காலை 8 மணியளவில் தொடங்கி 4 மணி வரை நடைபெறவிருக்கிறது.
இதையடுத்து, முதல் முறையாக மாடுபிடி வீரர்களுக்குக் காப்பீடு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.பிரதமர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், இன்று அவனியா புரம் இளைஞர்களுக்குக் காப்பீடு செய்யப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, வீரர்களுக்கு ஜல்லிக்கட்டு போட்டிக்கான உடல் தகுதித் தேர்வு நடைபெறுகிறது.
இந்தத் தகுதி தேர்வில், இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதித்து, 155 சென்டிமீட்டர் உயரம், உயரத்திற்கு ஏற்ற உடல் எடை இருக்கிறதா என சோதனை செய்யப்படும். குறிப்பாக, மது அருந்தியிருக்கக்கூடாது. அறுவை சிகிச்சைகள் இன்றி உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்.
இந்த மருத்துவ சோதனையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மருத்துவப் பரிசோதனை சான்று மற்றும் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர் மாடுபிடி வீரர்களுக்கான அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது.
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு இரண்டு நாட்களுக்கு முன் நடைபெற்றது. இதில் பல இளைஞர்கள் ஆர்வத்துடன் காத்திருந்து பதிவு செய்து கொண்டனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டி நாளை காலை 8 மணியளவில் தொடங்கி 4 மணி வரை நடைபெறவிருக்கிறது.
இதையடுத்து, முதல் முறையாக மாடுபிடி வீரர்களுக்குக் காப்பீடு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.பிரதமர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், இன்று அவனியா புரம் இளைஞர்களுக்குக் காப்பீடு செய்யப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, வீரர்களுக்கு ஜல்லிக்கட்டு போட்டிக்கான உடல் தகுதித் தேர்வு நடைபெறுகிறது.
இந்தத் தகுதி தேர்வில், இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதித்து, 155 சென்டிமீட்டர் உயரம், உயரத்திற்கு ஏற்ற உடல் எடை இருக்கிறதா என சோதனை செய்யப்படும். குறிப்பாக, மது அருந்தியிருக்கக்கூடாது. அறுவை சிகிச்சைகள் இன்றி உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்.
இந்த மருத்துவ சோதனையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மருத்துவப் பரிசோதனை சான்று மற்றும் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர் மாடுபிடி வீரர்களுக்கான அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது.