திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனி கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்க உள்ளது.
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனி கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்க உள்ளது.
முருகனின் மூன்றாம் படைவீடான, பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம். இத்திருவிழாவுக்காக டிசம்பர் மாத ஆரம்பத்தில் இருந்தே ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாக வரத் தொடங்கி விட்டனர்.
10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழா நாளை காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் கிழக்கு ரத வீதியில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.
இந்த திருவிழா நடைபெறும் 10 நாட்களும், வள்ளி - தெய்வானை சமேதரராய் முத்துக்குமாரசுவாமி தந்தப்பல்லக்கு, வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளிக்காமதேனு, வெள்ளி யானை, தங்கக்குதிரை உள்ளிட்ட வாகனங்களில் ரதவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெறும். இதன் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண நிகழ்ச்சி வரும் 20 -ம் தேதி இரவு 7.45 மணிக்கு மேல் நடக்கிறது.
இதனைத் தொடர்ந்து, இரவு 9.30 மணிக்கு வெள்ளி ரதத்தில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி ரதவீதிகள் உலா வரும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. பக்தர்கள் அனைவரும் எதிர்பார்க்கும் தைப்பூச தேரோட்ட நிகழ்ச்சி 21 -ம் தேதி மாலை 4.30 மணிக்கு நடக்கிறது. 24 -ம் தேதி இரவு 7 மணிக்கு தெப்பத்தேர் உற்சவம் நடைபெறும். மேலும், இரவு 11 மணிக்கு கொடி இறக்குதலுடன் விழா நிறைவடையும்.
முருகனின் மூன்றாம் படைவீடான, பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம். இத்திருவிழாவுக்காக டிசம்பர் மாத ஆரம்பத்தில் இருந்தே ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாக வரத் தொடங்கி விட்டனர்.
10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழா நாளை காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் கிழக்கு ரத வீதியில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.
இந்த திருவிழா நடைபெறும் 10 நாட்களும், வள்ளி - தெய்வானை சமேதரராய் முத்துக்குமாரசுவாமி தந்தப்பல்லக்கு, வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளிக்காமதேனு, வெள்ளி யானை, தங்கக்குதிரை உள்ளிட்ட வாகனங்களில் ரதவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெறும். இதன் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண நிகழ்ச்சி வரும் 20 -ம் தேதி இரவு 7.45 மணிக்கு மேல் நடக்கிறது.
இதனைத் தொடர்ந்து, இரவு 9.30 மணிக்கு வெள்ளி ரதத்தில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி ரதவீதிகள் உலா வரும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. பக்தர்கள் அனைவரும் எதிர்பார்க்கும் தைப்பூச தேரோட்ட நிகழ்ச்சி 21 -ம் தேதி மாலை 4.30 மணிக்கு நடக்கிறது. 24 -ம் தேதி இரவு 7 மணிக்கு தெப்பத்தேர் உற்சவம் நடைபெறும். மேலும், இரவு 11 மணிக்கு கொடி இறக்குதலுடன் விழா நிறைவடையும்.