கோவையில் தொடர் இருசக்கர வாகன கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையன் கைது : 15 வாகனங்கள் பறிமுதல்

கோவை: கோவையில் தொடர்ந்து இருசக்கர வாகனங்களைத் திருடிய கொள்ளையனைத் தனிப்படை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 15 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.


கோவை : கோவையில் தொடர்ந்து இருசக்கர வாகனங்களைத் திருடிய கொள்ளையனைத் தனிப்படை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 15 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளனர். 

கோவை மாவட்டத்தில், இருசக்கர வாகன திருட்டு சம்பவம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த இருசக்கர வாகன கொள்ளையர்கள், கல்லூரிகள், வணிக வளாகங்கள், விளையாட்டு மைதானங்கள், மருத்துவமனைகள் என அனைத்து இடங்களிலும் தங்கள் கைவரிசையைக் காட்டி வருகின்றனர். குறிப்பாக, கோவை அரசு மருத்துவமனைக்கு வருவோரின் இருசக்கர வாகனங்களைத் தொடர்ச்சியாக கொள்ளையடித்து வருகின்றனர். 

இது தொடர்பாக, காவல்துறையினர் எவ்வளவு விழிப்பாக இருந்தாலும் கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டி வருகின்றனர். இதையடுத்து, கோவை மாநகரக் குற்றப்பிரிவு துணை ஆணையர் பி.பெருமாள் உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்குகள் குறித்து புலனாய்வு செய்யப்பட்டது. இதில், இருசக்கர வாகன திருட்டுகளில் முக்கிய குற்றவாளியான, ஈரோடு, சூரப்பட்டியைச் ச் சேர்ந்த மணியழகன் (30), என்பவரைத் தனிப்படை போலீஸார் கைது செய்தனர். 



இதையடுத்து, மதியழகனிடமிருந்து சித்ரா பகுதியில் இருந்து திருடப்பட்ட 4 இருசக்கர வாகனங்களும், காளப்பட்டி பகுதியில் திருடப்பட்ட ஒரு இருசக்கர வாகனமும், கணுவாய் பகுதியில் திருடப்பட்ட 2 வாகனங்களும், தஞ்சாவூர் பகுதியில் 5 வாகனங்களும், பழனி பகுதியில் 3 வாகனங்களும் என மொத்தம் 15 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 

இதன் மொத்த மதிப்பு ரூ.4 லட்சத்து 24 ஆயிரம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், இவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் இவருடன் குற்றத்தில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...