கோவை பிரபல நகை கடைக்கு எடுத்து வந்த நகைகளை கொள்ளையடித்த வழக்கில் 7 பேர் கைது : தனிப்படை போலீசார் அதிரடி

கோவை : கோவை, பாலக்காடு சாலையில் உள்ள காக்காசாவடி அருகே 350 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு தொடர்பாக 7 பேரைத் தனிப்படை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை : கோவை, பாலக்காடு சாலையில் உள்ள காக்காசாவடி அருகே 350 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு தொடர்பாக 7 பேரைத் தனிப்படை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கேரள மாநிலம் திருச்சூர் கல்யாண் ஜூவல்லர்ஸ் கிளையில் இருந்து, கோவையில் உள்ள கல்யாண் ஜூவல்லர்ஸ் கிளைக்கு 350 பவுன் தங்க நகை, 243.320 கிராம் வெள்ளி நகை கடந்த 7 -ம் தேதி எடுத்து வரப்பட்டது. திருச்சூர் கிளையின் ஊழியர்கள் திருச்சூரை சேர்ந்த அர்ஜூன் (22), வில்பர்ட்(31,) ஆகியோர் நகையை எடுத்து வந்தனர். இந்நிலையில், காக்காசாவடி அருகே உள்ள நவக்கரை அருகே கார் வந்த போது, மர்மநபர்கள் அர்ஜூன் மற்றும் வில்பர்ட்டை தாக்கியுள்ளனர். 



இதையடுத்து, மர்மநபர்கள் காருடன் 350 பவுன் நகை, 243.320 கிராம் நகையை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த நகையின் மதிப்பு ரூ.98 லட்சம் ஆகும். இதுகுறித்து க.க. சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து கொள்ளையர்களைப் பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் சரணடைந்தனர். 



இதனிடையே, தற்போது, இவ்வழக்கில் தொடர்புடையதாக 7 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருவதாக தனிப்படை போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இக்கொள்ளைச் சம்பவத்தில் 12 பேருக்கு தொடர்பிருப்பதாகவும், அனைவரையும் பிடித்து விசாரித்தால் மட்டுமே கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் எங்கு மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்பதும் தெரியவரும், என போலீசார் தெரிவித்தனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...