திருப்பூர் : திருப்பூரில் பணி முடிந்து தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் கைப்பையை திருடிவிட்டு ஓட முயன்ற இளைஞருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
திருப்பூர் : திருப்பூரில் பணி முடிந்து தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் கைப்பையை திருடிவிட்டு ஓட முயன்ற இளைஞருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வீதி நொய்யல் பாலத்தில் பணி முடிந்து தனியாக நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் கைப்பையை பிடுங்கிவிட்டு ஓட முயன்ற இளைஞரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்தனர். இதையடுத்து, அவரிடமிருந்த பெண்ணின் பையினை மீட்டு கொடுத்தனர். இந்நிலையில், அப்பகுதியில் தொடர்ந்து பல திருட்டு சம்பவங்கள் நிகழ்வதால், இந்த திருட்டில் ஈடுபட்ட இளைஞர் மீது பொதுமக்களுக்கு சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து, சுமார் 10 நிமிடங்களுக்கும் மேலாக அவரை பொதுமக்கள் கடுமையாகத் தாக்கினர். இதனிடையே, அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, விரைந்து வந்த தெற்கு போலீசார் பொதுமக்களிடமிருந்து இளைஞரை மீட்டு விசாரித்தனர்.

இதில், அவர் பெயர் சதீஷ் என்பதும், ராஜபாளையத்தை சேர்ந்த இவர் திருப்பூரில் தங்கி போர்வெல் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. மது போதையில் இருந்த இவரிடமிருந்து யாரோ பணத்தை திருடி விட்டதால், வேறு வழியின்றி திருடியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிவித்தார். ஆனாலும், சதீஷ் மீது வேறு குற்ற வழக்குகள் உள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வீதி நொய்யல் பாலத்தில் பணி முடிந்து தனியாக நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் கைப்பையை பிடுங்கிவிட்டு ஓட முயன்ற இளைஞரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்தனர். இதையடுத்து, அவரிடமிருந்த பெண்ணின் பையினை மீட்டு கொடுத்தனர். இந்நிலையில், அப்பகுதியில் தொடர்ந்து பல திருட்டு சம்பவங்கள் நிகழ்வதால், இந்த திருட்டில் ஈடுபட்ட இளைஞர் மீது பொதுமக்களுக்கு சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து, சுமார் 10 நிமிடங்களுக்கும் மேலாக அவரை பொதுமக்கள் கடுமையாகத் தாக்கினர். இதனிடையே, அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, விரைந்து வந்த தெற்கு போலீசார் பொதுமக்களிடமிருந்து இளைஞரை மீட்டு விசாரித்தனர்.

இதில், அவர் பெயர் சதீஷ் என்பதும், ராஜபாளையத்தை சேர்ந்த இவர் திருப்பூரில் தங்கி போர்வெல் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. மது போதையில் இருந்த இவரிடமிருந்து யாரோ பணத்தை திருடி விட்டதால், வேறு வழியின்றி திருடியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிவித்தார். ஆனாலும், சதீஷ் மீது வேறு குற்ற வழக்குகள் உள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.