மேட்டுப்பாளையத்தில் கல்லூரி மாணவர்கள் கொண்டாடிய சமத்துவப் பொங்கல் : கிராமிய நடனம் ஆடி உற்சாகம்

கோவை : மேட்டுப்பாளையம் அருகே தனியார் கல்லூரி மாணவர்கள், தமிழர்களின் பாரம்பரியம் மாறாமல் கிராமிய நடனமாடி, மண்பானையில் சமத்துவப் பொங்கல் வைத்து கொண்டாடினர்.


கோவை : மேட்டுப்பாளையம் அருகே தனியார் கல்லூரி மாணவர்கள், தமிழர்களின் பாரம்பரியம் மாறாமல் கிராமிய நடனமாடி, மண்பானையில் சமத்துவப் பொங்கல் வைத்து கொண்டாடினர்.



மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடையில் உள்ள ஆர்.வி. கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில், நடைபெற்ற மாணவ மாணவிகள் சமத்துவ பொங்கலை, கல்லூரி முதல்வர் சுகுணா முன்னிலையில் கல்லூரி அறங்காவலர் வெ.ராமகிருஷ்ணன் தலைமையேற்று துவக்கி வைத்தார். விழாவில், தமிழர்களின் பாரம்பரிய ஆடைகளான பெண்கள் சேலை கட்டியும், ஆண்கள் வேட்டி, சட்டை என புத்தாடைகளைஅணிந்தும், கரும்புகளை கட்டியும் புதுப்பாணையில் பச்சரி இட்டு பொங்கல் வைத்து பொங்கல் விழாவினை கொண்டாடினர்.



இதனையடுத்து, பொங்கலை சூரியனுக்கு படைத்தும், கால்நடைகளுக்கு கொடுத்தும் வழிபாடு செய்தனர். தமிழரின் பாரம்பரியம் மாறாமல் உரிஅடித்தல், கிராமிய நடனமாடியும் மகிழ்ந்தனர். இளைஞர்கள் கபாடி போன்ற பாரம்பரிய விளையாட்டுக்களில் பங்கேற்று உற்சாகமாக சமத்துவ பொங்கலை கொண்டாடினர். இந்த விழாவில், பொங்கல் கோலமிட்டும், கரகாட்டம், ஒயிலாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...