ரூ. 50 லட்சத்திற்கும் அதிகமாக வருமானம் ஈட்டும் விநியோகஸ்தர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த ஜி.எஸ்.டி. வரி 18 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக மத்திய அரசு குறைத்துள்ளது.
ரூ. 50 லட்சத்திற்கும் அதிகமாக வருமானம் ஈட்டும் விநியோகஸ்தர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த ஜி.எஸ்.டி. வரி 18 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக மத்திய அரசு குறைத்துள்ளது.
சேவைத் துறைகளுக்கான வரி சீரமைப்பு தொடர்பாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி வெளியிட்டுள்ள அறிவிப்பில் இதனை தெரிவித்துள்ளார். மேலும், இந்த வரி குறைப்பு நடவடிக்கை தயாரிப்பு மற்றும் உற்பத்தியாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் என அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- நிதியாண்டு கணக்கீட்டின்படி, 50 லட்சத்திற்கும் அதிகமாக வருமானம் ஈட்டும் விநியோகஸ்தர்களுக்கு மத்திய, மாநில ஜி.எஸ்.டி. 6 சதவீதமாக நிர்ணயிக்கப்படுகிறது. இந்த வரிக்குறைப்பு நடவடிக்கையானது, சரக்கு மற்றும் சேவை துறையில் இருக்கும் விநியோகஸ்தர்களுக்கும் பொருந்தும். தற்போது, சரக்கு வரியில் விதிவிலக்கு பெற்றுள்ளவர்களுக்கு இந்தத் திட்டம் பொருந்தாது.
குறிப்பாக, பெரும்பாலும் விநியோகஸ்தர்கள் கடன்பெறாமல் தங்களது பணியினை செய்து வருவதால், அவர்களுக்கு இந்த வரிக் குறைப்பு உகந்ததாகும். காலாண்டுக்கு ஒருமுறை வரியினை செலுத்த வேண்டும். ஆனால், ஆண்டிறுதியில் வரி விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும்.
வரிவிலக்கு உச்சவரம்பு 40 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது குறித்து வரி வல்லுநர்கள் கூறுகையில், "நிர்ணயிக்கப்பட்டுள்ள உச்சவரம்பு, சரக்கு விநியோகஸ்தகர்களுக்கு மட்டுமே ஏற்புடையதாக உள்ளது. சேவைத் துறையினருக்கு ஏற்புடையதல்ல." என்றனர்.
சேவைத் துறைகளுக்கான வரி சீரமைப்பு தொடர்பாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி வெளியிட்டுள்ள அறிவிப்பில் இதனை தெரிவித்துள்ளார். மேலும், இந்த வரி குறைப்பு நடவடிக்கை தயாரிப்பு மற்றும் உற்பத்தியாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் என அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- நிதியாண்டு கணக்கீட்டின்படி, 50 லட்சத்திற்கும் அதிகமாக வருமானம் ஈட்டும் விநியோகஸ்தர்களுக்கு மத்திய, மாநில ஜி.எஸ்.டி. 6 சதவீதமாக நிர்ணயிக்கப்படுகிறது. இந்த வரிக்குறைப்பு நடவடிக்கையானது, சரக்கு மற்றும் சேவை துறையில் இருக்கும் விநியோகஸ்தர்களுக்கும் பொருந்தும். தற்போது, சரக்கு வரியில் விதிவிலக்கு பெற்றுள்ளவர்களுக்கு இந்தத் திட்டம் பொருந்தாது.
குறிப்பாக, பெரும்பாலும் விநியோகஸ்தர்கள் கடன்பெறாமல் தங்களது பணியினை செய்து வருவதால், அவர்களுக்கு இந்த வரிக் குறைப்பு உகந்ததாகும். காலாண்டுக்கு ஒருமுறை வரியினை செலுத்த வேண்டும். ஆனால், ஆண்டிறுதியில் வரி விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும்.
வரிவிலக்கு உச்சவரம்பு 40 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது குறித்து வரி வல்லுநர்கள் கூறுகையில், "நிர்ணயிக்கப்பட்டுள்ள உச்சவரம்பு, சரக்கு விநியோகஸ்தகர்களுக்கு மட்டுமே ஏற்புடையதாக உள்ளது. சேவைத் துறையினருக்கு ஏற்புடையதல்ல." என்றனர்.