நீலகிரி மலைரயிலில் சுற்றுலாப்பயணிகள் வசதிக்காக நவீன ரயில் பெட்டிகள் தயாரிப்பு

நீலகிரி : உதகை மலை ரயில் போக்குவரத்துக்கு, சென்னை, ஐ.சி.எப்.,பில், நவீன ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நீலகிரி : உதகை மலை ரயில் போக்குவரத்துக்கு, சென்னை, ஐ.சி.எப்.,பில், நவீன ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

உதகை - மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும், பாரம்பரிய மலை ரயிலுக்கு சுற்றுலா பயணியர் மத்தியில், அமோக வரவேற்பு உள்ளது. இதனால், கூட்டம் காரணமாக அந்த ரயிலில் பயணிக்க முடியாமல், பலர் ஏமாற்றம் அடையும்நிலை உள்ளது. 



இந்நிலையை தவிர்க்க உதகை மலை ரயில் போக்குவரத்துக்காக சென்னையில் ஒருங்கிணைப்பு ரயில் பெட்டி தொழிற்சாலையான ஐ.சி.எப்.,பில், 15 ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. உதகை மலை ரயிலில் தற்போது இணைத்து இயக்கப்படும் பெட்டியை விட இப்பெட்டிகள் நீளமாக வடிவமைக்கப்பட்டு வருகின்றன. அழகான உள்கட்டமைப்பு வசதியுடன் நவீன இருக்கை வசதிகள், இயற்கை காட்சிகளை முழுவதுமாக பார்த்து ரசிக்க வசதியாக, பெரிய கண்ணாடி ஜன்னல்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. 

இதுவரை, முதல் வகுப்பு பெட்டி ஒன்று, இரண்டாம் வகுப்பு பெட்டி மூன்று, இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டி ஒன்று என, ஐந்து பெட்டிகளின் தயாரிப்பு பணி முடிந்துள்ளது. இந்த பெட்டிகள், விரைவில் உதகைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன. மீதமுள்ள, 10 பெட்டிகள் தயாரிக்கும் பணிகள் முடிந்ததும் உதகைக்கு அனுப்பப்பட உள்ளது. 

மேலும், இந்த புதிய பெட்டிகள், மேட்டுப்பாளையம் - குன்னுார் இடையே நீராவி இன்ஜினில் இணைக்கப்பட்டும், குன்னுார் - உதகை இடையே, பயோடீசல் இன்ஜினில் இணைக்கப்பட்டும் இயக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...