வேலூர் : இன்று வெளியாகியுள்ள நடிகர் அஜித்துன் விஸ்வாசம் திரைப்படத்தின் முதல் காட்சியைப் பார்க்க பணம் தர மறுத்ததால் மகனே தந்தையை எரித்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் : இன்று வெளியாகியுள்ள நடிகர் அஜித்துன் விஸ்வாசம் திரைப்படத்தின் முதல் காட்சியைப் பார்க்க பணம் தர மறுத்ததால் மகனே தந்தையை எரித்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே உள்ள கழிஞ்சூரை சேர்ந்தவர் பிரசாந்த் (எ) அஜித்குமார் (20). 6-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு கட்டட வேலை செய்து வருகிறார். இவரது தந்தை பீடி சுற்றும் தொழிலாளி. பிரசாந்த் தீவிர அஜித் ரசிகர். இந்நிலையில், விஸ்வாசம் வெளியாவதற்கு முதல் நாளான நேற்று இரவு தன் தந்தையிடம் விஸ்வாசம் படம் பார்ப்பதற்கு டிக்கெட் கட்டணம் கேட்டுள்ளார்.
பீடி சுற்றும் தொழிலாளியான பாண்டியன் பணம் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரப்பட்ட பிரசாந்த் அதிகாலை தந்தை பாண்டியன் தூங்கிக்கொண்டிருந்தபோது அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துவிட்டார் என்ற கோணத்தில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
இதனிடையே, பாண்டியன் எழுப்பிய அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். தற்போது அவர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்த சம்பவத்தின் போது பிரசாந்த் குடித்திருந்ததாக போலீசார் கருதுகின்றனர். இதையடுத்து, பிரசாந்த் போலீசார் பிடியில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும், வேலூர் மாவட்டம், அலங்கார் திரையரங்கில் நடந்த அதிகாலை விஸ்வாசம் படக் காட்சியில் ஏற்பட்ட நெரிசல் தகராறில் பிரதாப் என்ற ஒரு ரசிகர் இரண்டு சக ரசிகர்களை கத்தியால் குத்தியுள்ளார். இருவரும் தற்போது மருத்துவமனையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.