கோவையில் வரும் 24 -ம் தேதி எலக்ட்ரோடெக் கண்காட்சி- 2019 தொடக்கம்

கோவை : கோவையில் மின்னியல் மற்றும் தொழில் மின்னணுவியல் தொடர்பான எலக்ட்ரோடெக் கண்காட்சி ஜனவரி மாதம் 24 முதல் 27 -ம் தேதி வரை நடைபெற உள்ளது.

கோவை : கோவையில் மின்னியல் மற்றும் தொழில் மின்னணுவியல் தொடர்பான எலக்ட்ரோடெக் கண்காட்சி ஜனவரி மாதம் 24 முதல் 27 -ம் தேதி வரை நடைபெற உள்ளது. 

கோவை, கொடிசியா சார்பில் மின்னியல் மற்றும் தொழில் மின்னணுவியல் தொடர்பான எலக்ட்ரோடெக்- 2019 கண்காட்சி நடைபெறுகிறது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவ்வமைப்பின் தலைவர் ராமமூர்த்தி பேசினார். 

அவர் கூறியதாவது :- வருகின்ற ஜனவரி 24 -ம் தேதி முதல் 27 -ம் தேதி வரை இந்த கண்காட்சி நடைபெற உள்ளது. மின்நிறுவல் பொறியாளர்கள் நலசங்கம், கோயமுத்தூர் மாவட்ட மின் வர்த்தகர்கள் சங்கம், கேரளா மின்சார வர்த்தக சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து இக்கண்காட்சியை நடத்துகிறது. 

இதில், ஆந்திரா, டெல்லி, குஜராத், ஹரியானா, கர்நாடக, கேரளா, மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலுங்கானா, உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். வர்த்தக பார்வையாளர்கள் சுமார் 20,000 பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கண்காட்சியை ஹீரோ எலக்ட்ரிக் குரூப்பின் டெசால்வ் செமிகண்டக்டர் பிரைவேட் லிமிடெட் இணை நிறுவனர் மற்றும் தலைவர் வீரப்பன் தொடங்கி வைப்பார். 

கடந்த முறை ரூ.130 கோடி வர்த்தகம் நடைபெற்றது. இந்தாண்டு ரூ.300 கோடி வர்த்தகம் நடைபெறும் என எதிர்பார்க்கிறோம். புதுப்பித்தக்க ஆற்றல் துறை மற்றும் மின்சார வாகனங்களுக்கான சிறப்பு வளாகம் அமைக்கப்படவுள்ளது. ஆற்றல், சுற்றுச்சூழல், தண்ணீர் உள்ளிட்டவை தொடர்பான கருத்தரங்கள் நடைபெற உள்ளது. மேலும், கழிவுநீர் மேலாண்மை குறித்து சிறப்பு கவனம் செலுத்த உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது கொடிசியா அமைப்பின் கௌரவ துணை செயலாளர் கார்த்திகேயன், எலக்ட்ரோடெக் கண்காட்சியின் தலைவர் முத்துகுமார், துணைத்தலைவர் தங்கசாமி, கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் பொன்ராம் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...