கோவை : பொங்கல் பரிசுடன் ரூ.1000 வழங்குவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை உடனடியாக தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர் டேனியல் ஜேசுதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
கோவை : பொங்கல் பரிசுடன் ரூ.1000 வழங்குவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை உடனடியாக தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர் டேனியல் ஜேசுதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பொங்கல் பரிசாக ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் வழக்கமாக வழங்கப்படும் அரசி, கரும்பு, சர்க்கரை மற்றும் ஏலக்காய் உடன், ரூ.1000 பரிசாக அளிக்கத் தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி நேற்று (9 -ம் தேதி) முதல் பரிசு பொருட்கள் மற்றும் பணம் குடும்ப அட்டைகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.
அனைத்து ரேசன் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் நியாயவிலை கடைகளில் பொங்கல் பரிசுடன் ரூ.1000 வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையை சேர்ந்த சமூக ஆர்வலர் டேனியல் ஜேசுதாஸ் என்பவர் வழக்கு தொடுத்து இருந்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் வறுமைக் கோட்டிற்கு மேல் இருப்பவர்களுக்குப் பொங்கல் பரிசாக பணம் கொடுக்க தடை விதித்துள்ளது.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த கோவையை சேர்ந்த சமூக ஆர்வலர் டேனியல் ஜேசுதாஸ் கோவை நீதிமன்ற வளாகத்தில் பேட்டியளித்தார். அவர் கூறியதாவது :- உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது, மற்றும் வரவேற்கத்தக்கது. கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்க நிதி இல்லாத நிலையில் வறுமைக் கோட்டிற்கு மேல் இருப்பவர்களுக்குப் பொங்கல் பரிசு வழங்குவது சரியல்ல என்பதால் வழக்கு தொடரப்பட்டது.
வசதி உள்ளவர்களுக்கும் ரூ.1000 வழங்குவது என்பது ஏற்புடையது அல்ல. தமிழக அரசு கடன்களை அதிகரிப்பதை விடுத்து கடன் சுமையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொங்கல் பரிசு விவகாரத்தில் அரசின் கொள்கை முடிவை எதிர்ப்பது தங்கள் நோக்கமல்ல. வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பவர்களுக்கு மட்டும் கொடுக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம்.
எனவே, நீதிமன்ற தீர்ப்பை உடனடியாக தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். நான் அரசியல் கட்சியில் இருந்தாலும், அதற்கும் இந்த வழக்கு தொடரப்பட்டதற்கும் எந்த தொடர்புமில்லை," இவ்வாறு அவர் கூறினார்.
பொங்கல் பரிசாக ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் வழக்கமாக வழங்கப்படும் அரசி, கரும்பு, சர்க்கரை மற்றும் ஏலக்காய் உடன், ரூ.1000 பரிசாக அளிக்கத் தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி நேற்று (9 -ம் தேதி) முதல் பரிசு பொருட்கள் மற்றும் பணம் குடும்ப அட்டைகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.
அனைத்து ரேசன் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் நியாயவிலை கடைகளில் பொங்கல் பரிசுடன் ரூ.1000 வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையை சேர்ந்த சமூக ஆர்வலர் டேனியல் ஜேசுதாஸ் என்பவர் வழக்கு தொடுத்து இருந்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் வறுமைக் கோட்டிற்கு மேல் இருப்பவர்களுக்குப் பொங்கல் பரிசாக பணம் கொடுக்க தடை விதித்துள்ளது.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த கோவையை சேர்ந்த சமூக ஆர்வலர் டேனியல் ஜேசுதாஸ் கோவை நீதிமன்ற வளாகத்தில் பேட்டியளித்தார். அவர் கூறியதாவது :- உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது, மற்றும் வரவேற்கத்தக்கது. கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்க நிதி இல்லாத நிலையில் வறுமைக் கோட்டிற்கு மேல் இருப்பவர்களுக்குப் பொங்கல் பரிசு வழங்குவது சரியல்ல என்பதால் வழக்கு தொடரப்பட்டது.
வசதி உள்ளவர்களுக்கும் ரூ.1000 வழங்குவது என்பது ஏற்புடையது அல்ல. தமிழக அரசு கடன்களை அதிகரிப்பதை விடுத்து கடன் சுமையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொங்கல் பரிசு விவகாரத்தில் அரசின் கொள்கை முடிவை எதிர்ப்பது தங்கள் நோக்கமல்ல. வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பவர்களுக்கு மட்டும் கொடுக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம்.
எனவே, நீதிமன்ற தீர்ப்பை உடனடியாக தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். நான் அரசியல் கட்சியில் இருந்தாலும், அதற்கும் இந்த வழக்கு தொடரப்பட்டதற்கும் எந்த தொடர்புமில்லை," இவ்வாறு அவர் கூறினார்.