'பொங்கல் பரிசு தொகை வாங்கிவிட்டீர்கள்' : குறுஞ்செய்தியைக் கண்டு அதிர்ந்த கோவையைச் சேர்ந்த தொழிலாளி

கோவை : கோவை மாவட்டம் ரத்தினபுரியைச் சேர்ந்த லேத் தொழிலாளி ஒருவர், பொங்கல் பரிசு தொகையை இன்னும் வாங்காத நிலையில், அதனைப் பெற்றுக் கொண்டதாக வந்த குறுஞ்செய்தியைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.


கோவை : கோவை மாவட்டம் ரத்தினபுரியைச் சேர்ந்த லேத் தொழிலாளி ஒருவர், பொங்கல் பரிசு தொகையை இன்னும் வாங்காத நிலையில், அதனைப் பெற்றுக் கொண்டதாக வந்த குறுஞ்செய்தியைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

ரத்தினபுரி போஸ்ட் கண்ணப்பநகரைச் சேர்ந்தவர் செல்வராஜ் (40). லேத் தொழில் செய்து வரும் இவர், காமாட்சி நகரில் உள்ள ரேஷன் கடையில் அங்கமாக உள்ளார். இவரது எண்ணுக்கு கடந்த சில மாதங்களாகவே ரேஷன் பொருட்கள் வாங்குவது போன்ற குறுஞ்செய்தி வருகிறது. இப்படியிருக்க, தமிழக அரசு சார்பில் பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு ரூ. 1,000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நேற்று மாலை செல்வராஜ் உடைய செல்போன் எண்ணுக்கு ஆயிரம் ரூபாயும், பொங்கல் பரிசும் பெற்றுக் கொண்டது போன்ற குறுஞ் செய்தி வந்துள்ளது. 

இது தொடர்பாக சந்தேகம் அடைந்த செல்வராஜ் அவரது பெற்றோரிடம் விசாரித்துள்ளார். ஆனால், இதுவரை அவர்கள் வீட்டிலிருந்து ரேஷன் கடைக்கு சென்று பணம் பெறவில்லை என தெரியவந்தது. இதையடுத்து, அவர் அந்த குறுஞ்செய்தியில் வந்துள்ள புகார் எண்ணுக்கு அழைத்துள்ளார். ஆனால், அந்தப் புகார் எண் செயல்படவில்லை.

இந்த நிலையில், அதிர்ச்சி அடைந்த செல்வராஜ் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளிக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து செல்வராஜ் கூறும்போது :- கடந்த சில மாதங்களாகவே எனக்கு அடிக்கடி ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கியது போன்ற மெசேஜ் வருகிறது. அதேபோல, நேற்று மாலை ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டது போன்ற மெசேஜ் வந்தது. இது எப்படி நடக்கிறது..? எங்கிருந்து நடக்கிறது..? என்பது தெரியவில்லை. அதில் உள்ள தொடர்பு எண்ணுக்கு அழைத்தாலும் அழைப்பும் போவது கிடையாது. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் புகார் அளிக்கப் போகிறேன், என தெரிவித்தார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...