கோவை : பட்டுச்சேலை உற்பத்தியில் தனியிடம் பிடித்துள்ள சிறுமுகை பகுதியில், வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கைத்தறி பட்டு சேலை உற்பத்தி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கோவை : பட்டுச்சேலை உற்பத்தியில் தனியிடம் பிடித்துள்ள சிறுமுகை பகுதியில், வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கைத்தறி பட்டு சேலை உற்பத்தி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள சிறுமுகை பகுதியில் சுமார் 3000 ஆயிரம் குடும்பங்கள் கைத்தறி நெசவுப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இங்கு தயாராகும் கைத்தறி பட்டு ரகங்கள் ஆண்டுக்கு ரூ.120 கோடி அளவிற்கு விற்பனையாகி வருகிறது. கைத்தறி மூலம் காட்டன், கோரா காட்டன், சாப்ட் சில்க் எனப்படும் மென்பட்டு சேலை ரகங்கள் நெய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இதனுடைய உற்பத்தியும், விற்பனையும் அதிகரித்துள்ளது. இதற்கெனவே, புத்தம் புதிய டிசைன்களில், பல்வேறு வண்ணங்களில் சுமார் 400 -க்கும் மேற்பட்ட மென்பட்டு கைத்தறி சேலைகள் தயாராகி வருகின்றன.
இதனிடையே, முழுவதும் மனித உழைப்பால், கைத்தறி நெசவாளர்களின் கை தேர்ந்த கலை வண்ணத்தை உணர்த்தும் வகையில் நெய்யப்படும் கைத்தறி மென்பட்டு சேலைகள் காஞ்சிபுரம் பட்டு சேலைகளை விட எடையும் விலையும் குறைவு. மேலும், பாதுகாப்பதும் எளிது. நீடித்து உழைக்கக் கூடியது.

இதனால், சிறுமுகை கைத்தறி பட்டு ரகங்கள் யாவும் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மற்றும் மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுக்கின்றன. தற்போது கம்யூட்டர் மூலம் டிசைன் செய்யப்பட்டு பின்னர் கைத்தறி மூலம் பட்டு சேலைகள் தயார் செய்யப்படுவதால், இளம் பெண்கள் இவற்றை வாங்கி அணியப் பெரிதும் விரும்புவதாக நெசவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள சிறுமுகை பகுதியில் சுமார் 3000 ஆயிரம் குடும்பங்கள் கைத்தறி நெசவுப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இங்கு தயாராகும் கைத்தறி பட்டு ரகங்கள் ஆண்டுக்கு ரூ.120 கோடி அளவிற்கு விற்பனையாகி வருகிறது. கைத்தறி மூலம் காட்டன், கோரா காட்டன், சாப்ட் சில்க் எனப்படும் மென்பட்டு சேலை ரகங்கள் நெய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இதனுடைய உற்பத்தியும், விற்பனையும் அதிகரித்துள்ளது. இதற்கெனவே, புத்தம் புதிய டிசைன்களில், பல்வேறு வண்ணங்களில் சுமார் 400 -க்கும் மேற்பட்ட மென்பட்டு கைத்தறி சேலைகள் தயாராகி வருகின்றன.
இதனிடையே, முழுவதும் மனித உழைப்பால், கைத்தறி நெசவாளர்களின் கை தேர்ந்த கலை வண்ணத்தை உணர்த்தும் வகையில் நெய்யப்படும் கைத்தறி மென்பட்டு சேலைகள் காஞ்சிபுரம் பட்டு சேலைகளை விட எடையும் விலையும் குறைவு. மேலும், பாதுகாப்பதும் எளிது. நீடித்து உழைக்கக் கூடியது.

இதனால், சிறுமுகை கைத்தறி பட்டு ரகங்கள் யாவும் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மற்றும் மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுக்கின்றன. தற்போது கம்யூட்டர் மூலம் டிசைன் செய்யப்பட்டு பின்னர் கைத்தறி மூலம் பட்டு சேலைகள் தயார் செய்யப்படுவதால், இளம் பெண்கள் இவற்றை வாங்கி அணியப் பெரிதும் விரும்புவதாக நெசவாளர்கள் தெரிவிக்கின்றனர்.