பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கைத்தறி பட்டு சேலைகள் விற்பனை அதிகரிப்பு : கோவை நெசவாளர்கள் மகிழ்ச்சி

கோவை : பட்டுச்சேலை உற்பத்தியில் தனியிடம் பிடித்துள்ள சிறுமுகை பகுதியில், வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கைத்தறி பட்டு சேலை உற்பத்தி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவை : பட்டுச்சேலை உற்பத்தியில் தனியிடம் பிடித்துள்ள சிறுமுகை பகுதியில், வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கைத்தறி பட்டு சேலை உற்பத்தி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.



கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள சிறுமுகை பகுதியில் சுமார் 3000 ஆயிரம் குடும்பங்கள் கைத்தறி நெசவுப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இங்கு தயாராகும் கைத்தறி பட்டு ரகங்கள் ஆண்டுக்கு ரூ.120 கோடி அளவிற்கு விற்பனையாகி வருகிறது. கைத்தறி மூலம் காட்டன், கோரா காட்டன், சாப்ட் சில்க் எனப்படும் மென்பட்டு சேலை ரகங்கள் நெய்யப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இதனுடைய உற்பத்தியும், விற்பனையும் அதிகரித்துள்ளது. இதற்கெனவே, புத்தம் புதிய டிசைன்களில், பல்வேறு வண்ணங்களில் சுமார் 400 -க்கும் மேற்பட்ட மென்பட்டு கைத்தறி சேலைகள் தயாராகி வருகின்றன. 

இதனிடையே, முழுவதும் மனித உழைப்பால், கைத்தறி நெசவாளர்களின் கை தேர்ந்த கலை வண்ணத்தை உணர்த்தும் வகையில் நெய்யப்படும் கைத்தறி மென்பட்டு சேலைகள் காஞ்சிபுரம் பட்டு சேலைகளை விட எடையும் விலையும் குறைவு. மேலும், பாதுகாப்பதும் எளிது. நீடித்து உழைக்கக் கூடியது. 



இதனால், சிறுமுகை கைத்தறி பட்டு ரகங்கள் யாவும் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மற்றும் மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுக்கின்றன. தற்போது கம்யூட்டர் மூலம் டிசைன் செய்யப்பட்டு பின்னர் கைத்தறி மூலம் பட்டு சேலைகள் தயார் செய்யப்படுவதால், இளம் பெண்கள் இவற்றை வாங்கி அணியப் பெரிதும் விரும்புவதாக நெசவாளர்கள் தெரிவிக்கின்றனர். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...