கோவை : மத்திய அரசின் கொள்கை முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்டத்தில் பல்வேறு துறையைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை : மத்திய அரசின் கொள்கை முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்டத்தில் பல்வேறு துறையைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று முதல் நாடு தழுவிய 2 நாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில், மக்கள் சேவையில் உள்ள ரயில்வே, வங்கிகள், அஞ்சல், காப்பீடு உள்ளிட்ட துறை ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர்.நாடு முழுவதும் உள்ள மத்திய, மாநில அரசு ஊழியர்கள் என 17 லட்சம் பேர் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த நிலையில், கோவை மாவட்டத்தின் வெவ்வேறு இடங்களில் எல்.ஐ.சி, வருமான வரித்துறை, மத்திய கலால் துறை, மருந்தாளுனர்கள் ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் அரசு மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்கள் சங்கத்தினர் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று முதல் நாடு தழுவிய 2 நாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில், மக்கள் சேவையில் உள்ள ரயில்வே, வங்கிகள், அஞ்சல், காப்பீடு உள்ளிட்ட துறை ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர்.நாடு முழுவதும் உள்ள மத்திய, மாநில அரசு ஊழியர்கள் என 17 லட்சம் பேர் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த நிலையில், கோவை மாவட்டத்தின் வெவ்வேறு இடங்களில் எல்.ஐ.சி, வருமான வரித்துறை, மத்திய கலால் துறை, மருந்தாளுனர்கள் ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் அரசு மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்கள் சங்கத்தினர் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.