கம்பளி போர்வை தொழிலாளி கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை : கோவையில் கம்பளி போர்வை தொழிலாளியை கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து இன்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கோவை : கோவையில் கம்பளி போர்வை தொழிலாளியை கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து இன்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் சுகேல் இந்திரபால் மற்றும் அமித் குமார். இவர்கள் கடந்த வருடம் குனியமுத்தூர் பகுதியில் கம்பளி போர்வை விற்பனை செய்து வந்தனர். இதையடுத்து, கடந்த ஜனவரி மாதம் 15 -ம் தேதி விற்பனைக்குச் சென்று விட்டு மதிய வேளையில் சாப்பிட ஓட்டல் தேடி அலைந்துள்ளனர். அப்போது ஓட்டலுக்குச் செல்ல கார்த்திக் ராஜா என்பவரிடம் வழி கேட்டுள்ளனர். 

இந்நிலையில், கார்த்திக் பணத்தை தன்னிடம் கொடுத்தால் ஓட்டலுக்கு அழைத்துச் செல்வதாக கூறியுள்ளார். அப்போது சுகேல், தன் நண்பர்களிடம் அவனிடம் ஏன் பணத்தை கொடுக்க வேண்டும். நாமே தேடிக் கொள்ளலாம் என இந்தியில் பேசியுள்ளார். அதனைக் கேட்ட கார்த்திக் ராஜா தன்னைக் கிண்டல் செய்வதாகத் தவறாக புரிந்து கொண்டார். இதையடுத்து, ஆத்திரத்தில் சுகேலின் பின் மண்டையில் பலமாக அடித்துள்ளார். இதனால் சுகேல் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். 

இது தொடர்பாக குனியமுத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆய்வாளர் டி.எச்.கணேஷ் மேற்கொண்டு விசாரணையை நடத்தி கோவை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார். மேலும், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குணசேகரன் கார்த்திக் ராஜாவுக்கு ஆயுள் தண்டனையும் அளித்து இன்று தீர்ப்பளித்தார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...