கோவை : கோவையில் தமிழ்நாடு மருத்துவ தேர்வு வாரிய செவிலியர் மேம்பாட்டு சங்கத்தினர் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் 60 -க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பங்கேற்றுக் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
கோவை : கோவையில் தமிழ்நாடு மருத்துவ தேர்வு வாரிய செவிலியர் மேம்பாட்டு சங்கத்தினர் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் 60 -க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பங்கேற்றுக் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், சம வேலைக்குச் சம ஊதியம் வழங்கிட வேண்டும், பழிவாங்கும் நோக்கில் பணியிட மாற்றம் ரத்து செய்தல், இடம் மாறுதல் ஆணைப் பெற்றும் விடுவிக்கப்படாத செவிலியர்களை விடுக்கக் கோருதல் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மருத்துவ தேர்வு வாரிய செவிலியர் மேம்பாட்டு சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்பாட்டத்தில் மாநில துணை தலைவர் மணிமேகலை தலைமை ஏற்றார். மாவட்ட துணை தலைவர் சிவபிரியா, மாவட்ட செயலாளர் ஹெப்சியா, மாவட்ட துணை தலைவர் ஜான்சி உள்ளிட்டோர் பங்கேற்று கோரிக்கை முழக்க கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், 60 -க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பங்கேற்றுக் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதையடுத்து, ஏழு அம்ச கோரிக்கைகள் மீது அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மேலும், தீர்மானங்களை மாவட்ட ஆட்சியர் மூலம் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளருக்கு அனுப்ப உள்ளதாகவும் தகவல் தெரிவித்தனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், சம வேலைக்குச் சம ஊதியம் வழங்கிட வேண்டும், பழிவாங்கும் நோக்கில் பணியிட மாற்றம் ரத்து செய்தல், இடம் மாறுதல் ஆணைப் பெற்றும் விடுவிக்கப்படாத செவிலியர்களை விடுக்கக் கோருதல் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மருத்துவ தேர்வு வாரிய செவிலியர் மேம்பாட்டு சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்பாட்டத்தில் மாநில துணை தலைவர் மணிமேகலை தலைமை ஏற்றார். மாவட்ட துணை தலைவர் சிவபிரியா, மாவட்ட செயலாளர் ஹெப்சியா, மாவட்ட துணை தலைவர் ஜான்சி உள்ளிட்டோர் பங்கேற்று கோரிக்கை முழக்க கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், 60 -க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பங்கேற்றுக் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதையடுத்து, ஏழு அம்ச கோரிக்கைகள் மீது அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மேலும், தீர்மானங்களை மாவட்ட ஆட்சியர் மூலம் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளருக்கு அனுப்ப உள்ளதாகவும் தகவல் தெரிவித்தனர்.