கோவை : பிளாஸ்டிக் கப்பிற்கு மாற்றாகக் காகித கப்புகளை உபயோகிக்க அரசு உத்தரவிட வேண்டும் என தமிழக - புதுச்சேரி பேப்பர் கப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை : பிளாஸ்டிக் கப்பிற்கு மாற்றாகக் காகித கப்புகளை உபயோகிக்க அரசு உத்தரவிட வேண்டும் என தமிழக - புதுச்சேரி பேப்பர் கப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்று மக்கள் குறை தீர்ப்பு நாள். இதையடுத்து, கோவை மாவட்ட கிளையை சார்ந்த தமிழ்நாடு - புதுச்சேரி பேப்பர் கப் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், தமிழகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்தத் தொழிலில் ஈடுபட்டு உள்ளனர். குறிப்பாக, கோவை மாவட்டத்தில் 45 தொழிற்கூடங்களில் இந்தத் தொழில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தமிழக அரசு 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. அவை யாவும் இந்த உற்பத்தியில் அடங்கியுள்ளது. தற்போது அவ்வாறு தடை செய்யப்பட்ட பேப்பர் கப்பில் 6% மட்டுமே குறைந்த அடர்த்திக் கொண்ட பாலி எத்திலினை பயன்படுத்திச் செய்யப்படுகிறது. இதனிடையே, அதனை 4% குறைக்க அரசு கேட்டு கொண்டதிற்கு ஏற்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் இறுதி அறிக்கை வடிவம் பெற்ற பின்னர் அரசிடம் சமர்ப்பிக்கப்படும். பிளாஸ்டிக்கிற்கு மாற்றாகப் பல இடங்களில் பேப்பர் பொருட்கள் பயன்பாட்டில் அதிகம் உள்ளது. அரசு இதனைக் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், மாவட்ட தொழில்மையம் மூலம் கடன் பெற்று தொழில் தொடக்க நிலையில் அரசு ஆணையை ஏற்று, 14 வகையான பேப்பர் பொருட்கள் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளதாகக் கூறியவர்கள் அரசின் மறு ஆணை வரும் வரை வங்கிக்கு செலுத்த வேண்டிய கடனை நிலுவையில் வைக்க மாவட்ட ஆட்சியர் பரிந்துரைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.
இன்று மக்கள் குறை தீர்ப்பு நாள். இதையடுத்து, கோவை மாவட்ட கிளையை சார்ந்த தமிழ்நாடு - புதுச்சேரி பேப்பர் கப் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், தமிழகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்தத் தொழிலில் ஈடுபட்டு உள்ளனர். குறிப்பாக, கோவை மாவட்டத்தில் 45 தொழிற்கூடங்களில் இந்தத் தொழில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தமிழக அரசு 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. அவை யாவும் இந்த உற்பத்தியில் அடங்கியுள்ளது. தற்போது அவ்வாறு தடை செய்யப்பட்ட பேப்பர் கப்பில் 6% மட்டுமே குறைந்த அடர்த்திக் கொண்ட பாலி எத்திலினை பயன்படுத்திச் செய்யப்படுகிறது. இதனிடையே, அதனை 4% குறைக்க அரசு கேட்டு கொண்டதிற்கு ஏற்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் இறுதி அறிக்கை வடிவம் பெற்ற பின்னர் அரசிடம் சமர்ப்பிக்கப்படும். பிளாஸ்டிக்கிற்கு மாற்றாகப் பல இடங்களில் பேப்பர் பொருட்கள் பயன்பாட்டில் அதிகம் உள்ளது. அரசு இதனைக் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், மாவட்ட தொழில்மையம் மூலம் கடன் பெற்று தொழில் தொடக்க நிலையில் அரசு ஆணையை ஏற்று, 14 வகையான பேப்பர் பொருட்கள் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளதாகக் கூறியவர்கள் அரசின் மறு ஆணை வரும் வரை வங்கிக்கு செலுத்த வேண்டிய கடனை நிலுவையில் வைக்க மாவட்ட ஆட்சியர் பரிந்துரைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.