கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுதாரர்களுக்கு இலவசமாக மனுக்களை எழுதி கொடுக்க வந்த கல்லூரி மாணவிகளுக்கு மனுதாரர்கள் பாராட்டுடன் கூடிய நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுதாரர்களுக்கு இலவசமாக மனுக்களை எழுதி கொடுக்க வந்த கல்லூரி மாணவிகளுக்கு மனுதாரர்கள் பாராட்டுடன் கூடிய நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறை தீர்ப்பு நாளில், பல்வேறு பிரச்சனைகளுக்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளிக்க பொதுமக்கள் வருவது வழக்கமான ஒன்று. இதில், ஒரு சிலர் பேருக்கு மனு எழுத தெரியாமல், அங்கு வந்து எழுதி கொடுக்க சொல்லிக் கேட்டு காத்திருப்பார்கள். வெளியில் அமர்ந்துள்ள சிலர் மனுக்களை எழுதி கொடுத்து ஒரு சிறிய தொகையை மனு கொடுக்க வருபவர்களிடம் பெற்று கொள்வர். ஒரு சில நேரங்களில் பணம் இல்லாமலும், மனு எழுத முடியாமல் பரிதவிப்பர்.
இதனைக் கருத்தில் கொண்டு, மக்கள் குறைதீர்ப்பு நாளில் பொதுமக்களுக்கு மனு எழுத மாணவர்கள் இலவசமாக உதவ வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கல்லூரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தது. இதைத்தொடர்ந்து, வாரந்தோறும் மாணவர்கள் பொதுமக்களுக்கு உதவி வந்த நிலையில், கடந்த 2 அல்லது 3 ஆண்டுகளாக மாணவர்கள் வருகை நின்றது.

தற்போது, கோவை சரவணம்பட்டி அருகே உள்ள ஸ்ரீ ராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரியில் பி.காம் மற்றும் எம்.காம் பயிலும் மாணவிகள் 10 பேர், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுதாரர்களுக்கு இலவசமாக மனு எழுதிக் கொடுத்தனர். நீண்ட இடைவேளைகளுக்குப் பிறகு, கல்லூரி மாணவர்கள் மீண்டும் பொதுமக்களுக்கு உதவ வந்துள்ளதால், மனுதாரர்கள் மாணவிகளை வெகுவாகப் பாராட்டினர்.
தொடர்ந்து, வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மாணவர்கள் இவ்வாறு உதவினால் உதவியாக இருக்கும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு சிறிய இடம் ஒதுக்கி, அவர்ளை ஊக்குவித்தால் மக்கள் குறைதீர்ப்பு நாளில் மனு அளிக்க வருபவர்களுக்கு உதவியாக இருக்கும் என்பது பலரின் எதிர்பார்ப்பாகும்.
வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறை தீர்ப்பு நாளில், பல்வேறு பிரச்சனைகளுக்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளிக்க பொதுமக்கள் வருவது வழக்கமான ஒன்று. இதில், ஒரு சிலர் பேருக்கு மனு எழுத தெரியாமல், அங்கு வந்து எழுதி கொடுக்க சொல்லிக் கேட்டு காத்திருப்பார்கள். வெளியில் அமர்ந்துள்ள சிலர் மனுக்களை எழுதி கொடுத்து ஒரு சிறிய தொகையை மனு கொடுக்க வருபவர்களிடம் பெற்று கொள்வர். ஒரு சில நேரங்களில் பணம் இல்லாமலும், மனு எழுத முடியாமல் பரிதவிப்பர்.
இதனைக் கருத்தில் கொண்டு, மக்கள் குறைதீர்ப்பு நாளில் பொதுமக்களுக்கு மனு எழுத மாணவர்கள் இலவசமாக உதவ வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கல்லூரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தது. இதைத்தொடர்ந்து, வாரந்தோறும் மாணவர்கள் பொதுமக்களுக்கு உதவி வந்த நிலையில், கடந்த 2 அல்லது 3 ஆண்டுகளாக மாணவர்கள் வருகை நின்றது.

தற்போது, கோவை சரவணம்பட்டி அருகே உள்ள ஸ்ரீ ராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரியில் பி.காம் மற்றும் எம்.காம் பயிலும் மாணவிகள் 10 பேர், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுதாரர்களுக்கு இலவசமாக மனு எழுதிக் கொடுத்தனர். நீண்ட இடைவேளைகளுக்குப் பிறகு, கல்லூரி மாணவர்கள் மீண்டும் பொதுமக்களுக்கு உதவ வந்துள்ளதால், மனுதாரர்கள் மாணவிகளை வெகுவாகப் பாராட்டினர்.
தொடர்ந்து, வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மாணவர்கள் இவ்வாறு உதவினால் உதவியாக இருக்கும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு சிறிய இடம் ஒதுக்கி, அவர்ளை ஊக்குவித்தால் மக்கள் குறைதீர்ப்பு நாளில் மனு அளிக்க வருபவர்களுக்கு உதவியாக இருக்கும் என்பது பலரின் எதிர்பார்ப்பாகும்.