முன்னாள் வாலிபால் வீராங்கனை அருணிமா சின்கா, தனது ஒற்றைக் காலுடன் அன்டார்டிகாவின் உயர்ந்த சிகரமான வின்சன் சிகரத்தை ஏறி புதிய சாதனையை நிகழ்த்தி பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.
முன்னாள் வாலிபால் வீராங்கனை அருணிமா சின்கா, தனது ஒற்றைக் காலுடன் அன்டார்டிகாவின் உயர்ந்த சிகரமான வின்சன் சிகரத்தை ஏறி புதிய சாதனையை நிகழ்த்தி பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.
இந்தியாவை சேர்ந்த அருணிமா சின்ஹா 2013 -ம் ஆண்டு எவரஸ்ட் சிகரத்தைத் தொட்டு சாதனைப் படைத்தார். இந்த சாதனையினை செய்த முதல் மாற்றுத் திறனாளி பெண் அருணிமா ஆவார். இந்நிலையில், தனது 30 -ம் வயதில் அன்டார்டிகாவின் மிக உயர்ந்த சிகரம் வின்சனைத் தொட்டு மீண்டும் சாதனைப் படைத்துள்ளார்.
ஆனால், இந்த சாதனை சாதாரணமாக நிகழ்ந்துவிடவில்லை. நகை பறிக்கும் கும்பலால் ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்டு ஒரு காலை இழந்த முன்னாள் வாலிபால் வீராங்கனை அருணிமா சின்கா. தனது ஒற்றைக் காலுடன் அண்டார்ட்டிகாவின் வின்சன் சிகரத்தை ஏறி புதிய சாதனை ஒன்றைச் செய்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் அருணிமா சின்கா (25). சிறந்த வாலிபால் வீராங்கனை. கடந்த 2011 -ம் ஆண்டு ஏப்ரல் 12 -ம் தேதி லக்னோவில் இருந்து டெல்லிக்கு ரயிலில் பயணம் செய்தபோது, நகை பறிக்கும் கும்பல் ஒன்று அவரை கடுமையாகத் தாக்கி ஓடும் ரயிலில் இருந்து வெளியே தூக்கி வீசியது.
இந்த விபத்தில் அருணிமா தனது இடது காலை இழந்தார். தன் வாழ்நாளில் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற துடிப்பில் இருந்த அருணிமா இந்த விபத்தினால் முடங்க தயாராகயில்லை. எவரெஸ்ட் மலையேற்றம் தொடர்பான தகவல்கள், சாதனை வீரர்களைப் பற்றி படித்து தெரிந்துகொண்டு தானும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற வேண்டும் என்று முடிவு செய்தார்.
இதற்கு உதவியாக தனது மூத்த சகோதரர் மற்றும் பயிற்சியாளரின் ஊக்கத்தை மட்டும் எடுத்துக் கொண்டார். இதையடுத்து, உத்தரகாசியில் உள்ள டாடா ஸ்டீல் அட்வென்ச்சர் பவுண்டேசனில் இணைந்து மலையேற்ற பயிற்சி பெற்றார். சரியான பயிற்சிகளோடு எவரெஸ்ட் சிகரத்தை நோக்கி பயணம் மேற்கொண்டு சிகரத்தை எட்டினார். இதன்மூலம் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் மாற்றுத்திறனாளி இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இதைப் போலவே, அன்டார்டிகாவின் மிக உயர்ந்த சிகரமான மெளன்ட் வின்சனை தொட்டு தற்போது சாதனைப் படைத்துள்ளார். அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார். அதற்கு, இந்தியாவின் பிரதமர் மோடி வாழ்த்துகள் தெரிவித்து ரீ - ட்வீட் செய்திருந்தார்.
உலகின் மிக உயரமான சிகரத்தின் மீது ஏற நம்பிக்கை ஒன்றே போதுமானது, இரண்டு கால்கள் அவசியமில்லை என நிரூபித்துள்ளார் அருணிமா சின்கா.
இந்தியாவை சேர்ந்த அருணிமா சின்ஹா 2013 -ம் ஆண்டு எவரஸ்ட் சிகரத்தைத் தொட்டு சாதனைப் படைத்தார். இந்த சாதனையினை செய்த முதல் மாற்றுத் திறனாளி பெண் அருணிமா ஆவார். இந்நிலையில், தனது 30 -ம் வயதில் அன்டார்டிகாவின் மிக உயர்ந்த சிகரம் வின்சனைத் தொட்டு மீண்டும் சாதனைப் படைத்துள்ளார்.
ஆனால், இந்த சாதனை சாதாரணமாக நிகழ்ந்துவிடவில்லை. நகை பறிக்கும் கும்பலால் ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்டு ஒரு காலை இழந்த முன்னாள் வாலிபால் வீராங்கனை அருணிமா சின்கா. தனது ஒற்றைக் காலுடன் அண்டார்ட்டிகாவின் வின்சன் சிகரத்தை ஏறி புதிய சாதனை ஒன்றைச் செய்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் அருணிமா சின்கா (25). சிறந்த வாலிபால் வீராங்கனை. கடந்த 2011 -ம் ஆண்டு ஏப்ரல் 12 -ம் தேதி லக்னோவில் இருந்து டெல்லிக்கு ரயிலில் பயணம் செய்தபோது, நகை பறிக்கும் கும்பல் ஒன்று அவரை கடுமையாகத் தாக்கி ஓடும் ரயிலில் இருந்து வெளியே தூக்கி வீசியது.
இந்த விபத்தில் அருணிமா தனது இடது காலை இழந்தார். தன் வாழ்நாளில் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற துடிப்பில் இருந்த அருணிமா இந்த விபத்தினால் முடங்க தயாராகயில்லை. எவரெஸ்ட் மலையேற்றம் தொடர்பான தகவல்கள், சாதனை வீரர்களைப் பற்றி படித்து தெரிந்துகொண்டு தானும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற வேண்டும் என்று முடிவு செய்தார்.
இதற்கு உதவியாக தனது மூத்த சகோதரர் மற்றும் பயிற்சியாளரின் ஊக்கத்தை மட்டும் எடுத்துக் கொண்டார். இதையடுத்து, உத்தரகாசியில் உள்ள டாடா ஸ்டீல் அட்வென்ச்சர் பவுண்டேசனில் இணைந்து மலையேற்ற பயிற்சி பெற்றார். சரியான பயிற்சிகளோடு எவரெஸ்ட் சிகரத்தை நோக்கி பயணம் மேற்கொண்டு சிகரத்தை எட்டினார். இதன்மூலம் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் மாற்றுத்திறனாளி இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இதைப் போலவே, அன்டார்டிகாவின் மிக உயர்ந்த சிகரமான மெளன்ட் வின்சனை தொட்டு தற்போது சாதனைப் படைத்துள்ளார். அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார். அதற்கு, இந்தியாவின் பிரதமர் மோடி வாழ்த்துகள் தெரிவித்து ரீ - ட்வீட் செய்திருந்தார்.
உலகின் மிக உயரமான சிகரத்தின் மீது ஏற நம்பிக்கை ஒன்றே போதுமானது, இரண்டு கால்கள் அவசியமில்லை என நிரூபித்துள்ளார் அருணிமா சின்கா.