வாரக்கடனை மறுசீரமைக்க அனுமதி : இந்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை கூட்டமைப்பு வரவேற்பு

கோவை : ரிசர்வ் வங்கி, புத்தாண்டு பரிசாக, ரூ.25 கோடி வரையிலான, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் வாராக்கடனை மறுசீரமைக்க, வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளதை இந்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை கூட்டமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.


கோவை : ரிசர்வ் வங்கி, புத்தாண்டு பரிசாக, ரூ.25 கோடி வரையிலான, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் வாராக்கடனை மறுசீரமைக்க, வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளதை இந்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை கூட்டமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது. 

பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி., அமலாக்கம் ஆகியவற்றால் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதன் காரணமாக, வங்கிக் கடனை உரிய முறையில் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே, வங்கிகள், தவணை செலுத்தத் தவறும் நிறுவனங்களின் கடன்களை, வாராக்கடன் பிரிவில் சேர்த்து திவால் சட்டத்தின் மூலம், கடனை வசூலிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன.

இதனால், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மூடப்படும் அபாயம் உள்ளதால், அவற்றின் வாராக்கடன்களை மறுசீரமைக்க வேண்டும் என மத்திய அரசு ரிசர்வ் வங்கியை வலியுறுத்தி வந்தது. இந்நிலையில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் வாராக்கடனை மறுசீரமைக்க வங்கிகளுக்கு உத்தரவிட்டு அறிக்கை வெளியிட்டுவிள்ளது. 

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, ஜனவரி மாதம் 1 முதல் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின், ரூ.25 கோடி வரையிலான வாராக்கடன்கள் மறுசீரமைக்கப்படும். இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான கொள்கைகளை வங்கி மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் உருவாக்கி, அவற்றின் இயக்குனர் குழுவின் ஒப்புதலைப் பெற வேண்டும். மேலும், வங்கிகள் வாராக் கடனுக்காக ஏற்கனவே ஒதுக்கிய தொகையுடன், கடன் மறுசீரமைப்பிற்காகக் கூடுதலாக, 5 சதவீத தொகையை ஒதுக்க வேண்டும். எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பிற்கு, இந்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை கூட்டமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...