வாரக்கடனை மறுசீரமைக்க அனுமதி : இந்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை கூட்டமைப்பு வரவேற்பு

கோவை : ரிசர்வ் வங்கி, புத்தாண்டு பரிசாக, ரூ.25 கோடி வரையிலான, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் வாராக்கடனை மறுசீரமைக்க, வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளதை இந்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை கூட்டமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.


கோவை : ரிசர்வ் வங்கி, புத்தாண்டு பரிசாக, ரூ.25 கோடி வரையிலான, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் வாராக்கடனை மறுசீரமைக்க, வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளதை இந்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை கூட்டமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது. 

பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி., அமலாக்கம் ஆகியவற்றால் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதன் காரணமாக, வங்கிக் கடனை உரிய முறையில் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே, வங்கிகள், தவணை செலுத்தத் தவறும் நிறுவனங்களின் கடன்களை, வாராக்கடன் பிரிவில் சேர்த்து திவால் சட்டத்தின் மூலம், கடனை வசூலிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன.

இதனால், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மூடப்படும் அபாயம் உள்ளதால், அவற்றின் வாராக்கடன்களை மறுசீரமைக்க வேண்டும் என மத்திய அரசு ரிசர்வ் வங்கியை வலியுறுத்தி வந்தது. இந்நிலையில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் வாராக்கடனை மறுசீரமைக்க வங்கிகளுக்கு உத்தரவிட்டு அறிக்கை வெளியிட்டுவிள்ளது. 

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, ஜனவரி மாதம் 1 முதல் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின், ரூ.25 கோடி வரையிலான வாராக்கடன்கள் மறுசீரமைக்கப்படும். இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான கொள்கைகளை வங்கி மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் உருவாக்கி, அவற்றின் இயக்குனர் குழுவின் ஒப்புதலைப் பெற வேண்டும். மேலும், வங்கிகள் வாராக் கடனுக்காக ஏற்கனவே ஒதுக்கிய தொகையுடன், கடன் மறுசீரமைப்பிற்காகக் கூடுதலாக, 5 சதவீத தொகையை ஒதுக்க வேண்டும். எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பிற்கு, இந்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை கூட்டமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...